Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

சனி, ஜனவரி 30, 2010

கணவாய் வறுவல்


தேவையான பொருள்கள்
கனவாய்-1/2கிலோ
மிளகாய் பொடி-1தேக்கரண்டி
மஞ்சள் பொடி-1/2தேக்கரண்டி
கரம் மசாலா-1ஸ்பூன்
சோள மாவு-1தேக்கரண்டி
அரிசி மாவு-1தேக்கரண்டி
எலும்பிச்ச பழம்-1/2
முட்டை-1
உப்பு-தேவையான அளவு
தேங்காய் எண்ணை-பொறிக்க தேவையான அளவு

செய்முறை
கனவாயைய் நறுக்கி கொள்ளவும் பின் மசாலா பொடிகள்,மாவுகள்,எலும்பிச்சை சாறு, உப்பு எல்லாவற்றையும் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும் பின் அதில் முட்டை ஊற்றி நன்றாக கலக்கவும் அந்த கலவையில் கனவாய் போட்டு நன்கு கலக்கவும் அதை 30 நிமிடம் ஊற வைக்கவும் 30 நிமிடம் ஆனதும் சட்டியில் எண்ணை ஊற்றி சூடு வந்ததும் அந்த கனவாய் கலவையை போட்டு பொறித்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

சிந்து பைரவி பாடல்வரி

படம் : சிந்து பைரவி
இசை : இளையராஜா
பாடியவர்: சித்ரா

நானொரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்லை
உள்ள சோகம் தெரியவில்லை
தந்தையிருந்தும் தாயுமிருந்தும் சொந்தமெதுவுமில்லை
அதச் சொல்லத்தெரியவில்லை

நானொரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்லை
உள்ள சோகம் தெரியவில்லை
தந்தையிருந்தும் தாயுமிருந்தும் சொந்தமெதுவுமில்லை
அதச் சொல்லத்தெரியவில்லை


இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ

விதியோட நான் ஆடும் விளையாட்டைப் பாரு
விளையாத காட்டுக்கு விதை போட்டதாரு
பாட்டுப் படிச்சா சங்கதி உண்டு
என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு கண்டுபிடி


நானொரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்லை
உள்ள சோகம் தெரியவில்லை


பெண்கன்று பசு தேடிப் பார்க்கின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை

பெண்கன்று பசு தேடிப் பார்க்கின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை

என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
சொல்லுங்களேன்

நானொரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்லை
உள்ள சோகம் தெரியவில்லை
தந்தையிருந்தும் தாயுமிருந்தும் சொந்தமெதுவுமில்லை
அதச் சொல்லத்தெரியவில்லை

கிரீடம் பாடல்வரி

படம்: கிரீடம்
பாடியவர்: சாதனா சர்கம்

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி

காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச் சூட்டில் முகம் புதைப்பேன்

வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே

வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

வெள்ளி, ஜனவரி 29, 2010

குடைமிளகாய் பொறியல்


தேவையான பொருள்கள்
குடை மிளகாய்-2
வெங்காயம்-2
தக்காளி-1
இஞ்சி-ஒரு துண்டு
பூண்டு-4பல்
கடுகு,உளுந்து-1ஸ்பூன்
கருவாயிலை-1கொத்து
மிளகாய் பொடி-1/2ஸ்பூன்
மஞ்சள் பொடி1/4ஸ்பூன்
தனியா பொடி-1ஸ்பூன்
கறி மசாலா-1/2ஸ்பூன்
எண்ணை-3ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
கொத்த மல்லி-சிறிதளவு

செய்முறை
முதலில் நறுக்க வேண்டிய வெங்காயம்,தக்காளி,குடை மிளகாய், எல்லாவற்றையும் நறுக்கிக் கொள்ளவும் இஞ்சி,பூண்டு இரண்டையும் பொடிதாக நறுக்கவும்.
கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து போட்டு வெடித்தது வரும் போது வெங்காயம் போட்டு வதக்கவும் பின் இஞ்சி,பூண்டு, குடை மிளகாய் போட்டு நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும் அதனுடன் தக்காளி போட்டு வதக்கவும் பின் மசாலா பொடிகள் உப்பு எல்லாவற்றையும் போட்டு வதக்கவும் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் கருவாயிலை போட்டு 5நிமிடம் கொதிக்க விடவும் பின் அதன் மேல் மல்லி தூவி இறக்கவும்.

பின் குறிப்பு
பச்சை கலர் குடை மிளகாய் என்றால் நன்றாக வதக்க வேண்டும் ஏன் என்றால் அதில் கொஞ்சம் பச்சை வாசம் அதிகம் இதே வேற கலர் குடை மிளகாய் என்றால் வாசம் வராது அது சாப்பிடுவதற்க்கும் நன்றாக இருக்கும்

செவ்வாய், ஜனவரி 26, 2010

அதே நேரம் அதே இடம்

படம்: அதே நேரம் அதே இடம்
இசை: ப்ரேம்ஜி அமரன்
பாடியவர்: ஹரிசரன், ப்ரேம்ஜி அமரன்

ஹரிசரன்:அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்

ப்ரேம்ஜி:பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்

ஹரிசரன்:ஹே ஜோடியாய் இருந்தாய்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா

ப்ரேம்ஜி:ஹே துள்ளித்தான் திரியும்
பிள்ளையாய் இரு நீயும்
துன்பம்தான் மறந்து
பட்டம் போல் பற எப்போதும்

ஹரிசரன்:அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்

ப்ரேம்ஜி:பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்
நீயும் நானும், நீயும் நானும்,
நீயும் நானும், நீயும் நானும்,
நீயும் நானும்,,,,


ஹரிசரன்:இதயம் என்பது வீடு
ஒருத்தி வசிக்கும் கூடு
அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்

ப்ரேம்ஜி:உலகம் என்பது மேடை
தினமும் நடனம் ஆடு
புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு

ஹரிசரன்:நெஞ்சோடு பாரம் கண்டால்

ப்ரேம்ஜி:தூரத்தில் தூக்கிப்போடு

ஹரிசரன்:நெஞ்சோடு ஈரம் கண்டால்

ப்ரேம்ஜி:இன்னொரு பெண்ணைத்தேடு

ஹரிசரன்:ஓடம் போகும் பாதை ஏது

ப்ரேம்ஜி:வானில் மிதக்கலாம்

ஹரிசரன்:வலிக்கிற வார்த்தை ஏது

ப்ரேம்ஜி:எண்ணம் மறக்கலாம்

ஹரிசரன்:எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன்
அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாய்வேன்

ஹரிசரன்:அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்

ப்ரேம்ஜி:பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்
நீயும் நானும், நீயும் நானும்,
நீயும் நானும் நீயும் நானும்,
நீயும் நானும்


ஹரிசரன்:ஓ.. அவளைப் பிரிந்து நானும் உருகும் மெழுகு ஆவேன்
அவளின் நினைவால் எரிந்தேனே நானே

ப்ரேம்ஜி:ஓ பழகத் தெரியும் வாழ்வில் விலகத் தெரிய வேண்டும்
புரிந்தால் மனதில் துயரில்லை தானே

ஹரிசரன்:கல்வெட்டாய் வாழும் காதல்

ப்ரேம்ஜி:அழித்திட வேண்டும் நீயே

ஹரிசரன்:காற்றாற்றில் நீச்சல் காதல்

ப்ரேம்ஜி:கைத்தர வந்தேன் நானே

ஹரிசரன்:ஏற்காமல் போனாள் ஏனோ

ப்ரேம்ஜி:சோகம் எதற்குடா

ஹரிசரன்:ஆறாத காயம் தானோ

ப்ரேம்ஜி:காலம் மருந்துடா

ஹரிசரன்:உலகின் நடுவே தனியானேன் நானே
அவளால் அழுதேன் கடலானேன் நானே

ஹரிசரன்:அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்

ப்ரேம்ஜி:பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்

ஹரிசரன்:ஹே ஜோடியாய் இருந்தாய்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா

ப்ரேம்ஜி:ஹே துள்ளித்தான் திரியும்
பிள்ளையாய் இரு நீயும்
துன்பம்தான் மறந்து
பட்டம் போல் பற எப்போதும்

ஆழ்வார் பாடல்வரி

படம் : ஆழ்வார்
இசை : ஸ்ரீகாந்த் தேவா


பிடிக்கும் உனைபிடிக்கும் அழகா உனைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலாவைப் பிடிக்கும் ரொம்பப் பிடிக்கும்

பிடிக்கும் உனைபிடிக்கும் அழகா உனைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலாவைப் பிடிக்கும் ரொம்பப் பிடிக்கும்


அழகாய் இருப்பாய் எனக்குப் பிடிக்கும்
அழகான சிரிப்பை உலகுக்குப் பிடிக்கும்
அழகாய் அணைப்பாய் எனக்குப் பிடிக்கம்
அழகா உன் தமிழை உலகுக்குப் பிடிக்கும்

பிடிக்கும் உனைபிடிக்கும் அழகா உனைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலாவைப் பிடிக்கும் ரொம்பப் பிடிக்கும்

பிடிக்கும் உனைபிடிக்கும் அழகா உனைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலாவைப் பிடிக்கும் ரொம்பப் பிடிக்கும்

காபூல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும்
ரோஜாப்பூ போன்ற உன் தேகத்தைப் பிடிக்கும்
ரேஸ்காரைப் போன்ற உன் வேகத்தைப் பிடிக்கும்

தந்தம் போல் இருக்கும் உன் தோளைப் பிடிக்கும்
தங்கம் போல் மின்னிடம் உன் மார்பைப் பிடிக்கும்
உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்
உன்னோட வார்த்தைகள் எல்லாமே பிடிக்கும்

சின்னப் பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும்
நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும்
அன்றாடம் நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும்
அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும்
கன்னத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும்
காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும்
அப்பப்போ நேரும் ஊடல்கள் பிடிக்கும்
ஊடல்கள் தீர்ந்ததும் கூடல்கள் பிடிக்கும்

பிடிக்கும் உனைபிடிக்கும் அழகா உனைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலாவைப் பிடிக்கும் ரொம்பப் பிடிக்கும்

பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்

சிகரம் பாடல்வரி

படம் - சிகரம்
பாடியவர் -K.J.ஜேசுதாஸ்

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

கார்காலம் வந்தால் என்ன
கடும் கோடை வந்தால் என்ன
மழை வெள்ளம் போகும்
கரை இரண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய் அன்பு போகும்
மெய்யன்பு வாழும்

அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை

இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே
பசியாற பார்வைபோதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்

தலைசாய்க்க இடமாயில்லை
தலை கோத விரலாயில்லை
இளங்காற்று வரவாயில்லை
இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

இன்பா பாடல்வரி

படம்: இன்பா
பாடியவர்: கார்த்திக், சின்மயி

ஆண்:யாரோ யாரோ எந்த‌ன் நெஞ்சைத் தொட்டுப் போக‌
மேகத்துக்குள் மூழ்கி விட்டேன் நானே
யாரோ யாரோ எந்தன் கண்ணுரசிப் போக‌
அந்தரத்தில் தொங்குகிறேன் நானே
ஒரு நிமிடத்தில் என் இதயத்தில்
அட நூறு மைல் வேகத்திலே நுழைந்தாள்
ஒரு புன்னகை ஒரு கண்ணிமை
என் வானத்தையே இரண்டங்குலம் திறந்தாள்

காதலிக்கிறேன் முதல் தடவை
காத்திருக்கிறேன் பல தடவை
மூச்சு வழியாய் உள்புகுந்தாள்
இன்று வரையில் திரும்பவில்லை

காதலிக்கிறேன் முதல் தடவை
காத்திருக்கிறேன் பல தடவை
மூச்சு வழியாய் உள்புகுந்தாள்
இன்று வரையில் திரும்பவில்லை


யாரோ யாரோ எந்த‌ன் நெஞ்சைத் தொட்டுப் போக‌
மேகத்துக்குள் மூழ்கி விட்டேன் நானே
யாரோ யாரோ எந்தன் கண்ணுரசிப் போக‌
அந்தரத்தில் தொங்குகிறேன் நானே
ஒரு நிமிடத்தில் என் இதயத்தில்
அட நூறு மைல் வேகத்திலே நுழைந்தாள்
ஒரு புன்னகை ஒரு கண்ணிமை
என் வானத்தையே இரண்டங்குலம் திறந்தாள்


பெண்: வ‌குப்பின் முடிவில் க‌ண்க‌ள் இர‌ண்டை ச‌ந்திக்கின்ற‌ சிறு நேர‌ம்
அந்த‌ நொடிக்காய் காலை தொட‌ங்கிக் காத்திருக்கும் ம‌ன‌ம் பாவ‌ம்

ஆண்: ஜ‌ன்ன‌லருகே ச‌ரியும் கூந்த‌ல் மேஜைக‌ளைத் த‌ழுவாதா
மேஜை க‌ட‌ந்து அந்த‌ ஸ்ப‌ரிச‌ம் எந்த‌ன் விர‌ல் அறியாதா
வ‌ந்து விடுவாள் நெஞ்சைத் தொடுவாள்
என்ற நினைவில் நானும் ந‌ட‌ந்தேன்

யாரோ யாரோ எந்த‌ன் நெஞ்சைத் தொட்டுப் போக‌
மேகத்துக்குள் மூழ்கி விட்டேன் நானே
யாரோ யாரோ எந்தன் கண்ணுரசிப் போக‌
அந்தரத்தில் தொங்குகிறேன் நானே


பெண்:காதலிக்கிறேன் முதல் தடவை
காத்திருக்கிறேன் பல தடவை
மூச்சு வழியாய் உள்புகுந்தாள்
இன்று வரையில் திரும்பவில்லை

பெண்: நீ என் விரலானாய் வ‌ருடும் நேர‌மே
நான் உன் இமையானேன் உற‌ங்கும் கால‌மே

ஆண்: தேவ‌தைக‌ள் த‌ரை வ‌ந்து ந‌ட‌க்கும் நேரில் வ‌ந்து உத‌டுக‌ள் கொடுக்கும்
உன் வ‌ருகை உண‌ர்த்திய‌து என‌க்கு ந‌டுவில் இந்தத் த‌ய‌க்கமும் எத‌ற்கு

பெண்: உன் நேச‌த்தில் கைதாகிறேன் உன் பார்வையில் பெண்ணாகிறேன்
உன் தோள்க‌ளில் குடைசாய்கிறேன் உன் வீட்டில் தான் நான் வாழ்கிறேன்

இயற்கை பாடல்வரி

படம்: இயற்கை
பாடல்: வைரமுத்து
பாடியவர்: சுஜாதா
இசை: வித்யாசாகர்


பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ

கடலில் ஒருவன் கரையில் ஒருவன்
அவனோ உயிரில் இவனோ மனதில்
இரண்டில் எதுதான் வெல்லுமோ
சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லி இருப்பேன் நானாக‌
உள்ளுக்குள்ளே மூடி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக‌
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்களா இரவு

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேரா

பிரசவ வலி வர


கர்பமாக இருக்கும் சில பெண்களுக்கு டாக்டர் சொல்லும் டெலிவரி டேட் வந்தாலும் வலி வராது அதற்கு ஒரு கஞ்சி இருக்கு அதை காய்ச்சி கொடுத்தால் வலி வரும் அந்த கஞ்சி குடிக்கும் போது வெண்ணீர் வைத்து குளித்து விட்டுதான் குடிக்க வேண்டும்

கஞ்சிக்கு தேவையான பொருள்கள்
அரிசி-1கப்
முருங்கை கீரை-1/4கப்
வெந்தயம்-3ஸ்பூன்
தேங்காய் பால்-1கப்
உப்பு-தேவையான அளவு

செய்முறை
1.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
2.அரிசியை தண்ணீர் விட்டு கழுவவும்.
3.சூடாக்கிய தண்ணீரில் அரிசி,வெந்தயம்,உப்பு போட்டு கொதிக்க விடவும்.
4.எல்லாம் நன்றாக வெந்தவுடன் கீரை,பால் இரண்டையும் போடவும்.
5.எல்லாவற்றையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
6.அவ்வளவுதான் ரெடியாகி விடும் கஞ்சி.

பின் குறிப்பு
இந்த கஞ்சி இரண்டு நாள் குடித்தாள் போதும் வலி வந்து விடும் ஆனால் வெண்ணீர்
வைத்து குளித்து விட்டுதான் குடிக்க வேண்டும் சும்மா குடித்தால் ஒரு உபயோகமும் இல்லை.இந்த கஞ்சி எனக்கு காய்ச்சி தந்தார்கள் எனக்கு உடனே வலி வந்தது.
அனைவரும் தெரிந்து பயன் அடையவே நான் இந்த குறிப்பை போட்டேன்.

குடமிளகாய் பருப்பு கிரேவி



தேவையான பொருள்கள்
குடமிளகாய்-3பெரியது
துவரம் பருப்பு- 150 கிராம்
தக்காளி- 1
வெங்காயம்- 2
பச்சைமிளகாய்- 2
சீரகம் பொடி- 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்பொடி- 1 ஸ்பூன்
மிளகாய் பொடி-1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணை-3ஸ்பூன்
கடுகு-1ஸ்பூன்
வற மிளகாய்-3
கருவாயிலை-2கொத்து

செய்முறை
முதலில் குக்கரில் பருப்பு,இஞ்சி,பூண்டு,மஞ்சள் பொடி,மிளகாய் பொடி,சீரகப் பொடி எல்லாவற்றையும் போட்டு வேகவிடவும்.
சட்டியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு,வற மிளகாய்,கருவாயிலை,வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் பின் அதில் குடை மிளகாய் போட்டு வதக்கவும் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும் அதில் தக்காளி போட்டு வதக்கவும் எல்லாம் நன்றாக வதங்கியதும் அவித்து வைத்து இருக்கும் பருப்பை சேர்க்கவும் அடுப்பைஒரு 5 நிமிடம் சிம்மில் வைத்து இரக்கி கொத்தமல்லி தூவி பரிமாரவும்.

ஞாயிறு, ஜனவரி 24, 2010

குழந்தை பிறந்தவுடன்


குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய பரிசோதனைகள் குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய பல தொந்தரவுகளை சரிசெய்து விடலாம். குறை தைராய்டு : பிறவி தைராய்டு குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மூளை வளர்ச்சியின்மை, மனவளர்ச்சி குன்றிய தன்மை போன்றவற்றை இதன் மூலம் தவிர்க்க முடியும். குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும். அட்ரீனல் கோளாறு : பிறவியிலேயே அட்ரீனல் குறைபாடுள்ள குழந்தையாக இருந்தால் அதன் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி குறைந்திருக்கும். இக்குறைபாடு இருந்தால் உடனடியாக சிகிச்சை அளித்தால் மட்டுமே குழந்தையின் உடலைக் காக்க முடியும். என்சைம் குறைபாடு : என்சைம் குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு கண்புரை, மனவளர்ச்சி குறைபாடு போன்றவை ஏற்படலாம். குழந்தைக்கு உரிய ஊட்டச்சத்து உணவு கொடுத்து காப்பாற்ற முடியும். இந்தப் பரிசோதனைகளை குழந்தை பிறந்த மூன்று தினங்களுக்குள் அதன் குதிகாலில் இருந்து சிறு துளி ரத்தத்தை எடுத்து செய்ய வேண்டும்.

உத‌ட்டை அழகா‌க்க


உத‌ட்டி‌ற்கு வெறு‌ம் ‌லி‌ப்‌ஸ்டி‌க் ம‌ட்டு‌ம் போ‌ட்டா‌ல் போது‌ம், வேறெ‌ன்ன வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ண்‌ணி‌னீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் அது தவறு.

உத‌ட்டி‌ற்கு ‌லி‌ப் ‌கிளா‌ஸ், ‌லி‌ப் பெ‌ன்‌ஸி‌ல், மெ‌ட்டா‌லி‌க், ‌லி‌ப்‌ஸ்டி‌க், வாச‌லி‌ன் போ‌ன்றவை உதடுகளை அழகா‌க்க உதவு‌ம்.

லி‌ப் கிளா‌ஸ் போ‌ட்டா‌ல் பளபள‌ப்பாக இரு‌க்கு‌ம். அதே நேரத்தில் மிகக் குறைந்த அளவில் நிறத்தை தரக் கூடியது. லேசான நிறம் பெற சிறந்தது. ஆனால் அதிக நேரம் நீடிக்காது.

லிப் பென்ஸிலால் உதடுகளி‌ன் வடிவ‌த்தை முத‌லி‌ல் வரை‌ந்து‌வி‌ட்டு ‌வே‌ண்டுமானா‌ல் உதடு முழுவது‌ம் பெ‌ன்‌சிலை‌க் கொ‌ண்டே நிறத்தை பூசிவிட்டு லிப் கிளா‌ஸ் தடவினால், நீண்ட நேரம் நீடிக்கும்.

மெட்டாலிக் (ஷிம்மர்) தடவினால் லேசான நிறத்தைத் தரும். வெளிச்சத்தில் மின்னும் தன்மை கொண்டது. இரவு ‌விரு‌ந்துகளு‌க்கு ஏ‌ற்றது. அதிக அளவில் நிறத்தை விரும்பினால், லி‌ப்‌ஸ்டிக்கை உதடுகளில் பூசிய பின்னர் இதைத் தடவலாம்.

க்ரீ‌‌ம்‌மி‌ல் அதிக அளவில் கன்டிஷனரும், மாய்‌‌ட்சுரைஸரும் உள்ளன. உதடுகளுக்கு மென்மையான தோற்றத்தைத் தரக் கூடியது, அதே நேரத்தில் அதிக அளவில் நிறமும் பெறலாம்.

சின்னதாயி பாடல்வரி

படம்: சின்னதாயி
இசை: இசைஞானி இளையராஜா

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் …..

கொட்டவேனும் மேளம்…..
கையை கட்ட வேணும் யாரும்….
அஞ்சி நிக்கும் ஊரும்….
அருள்வாக்கு சொல்லும் நேரம்…

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

அன்னாடம் நாட்டுல
வெண்டைக்காய் சுண்டைக்காய்
விலையேறி போகுது மார்க்கெட்டுல……..

அன்னாடம் நாட்டுல
வெண்டைக்காய் சுண்டைக்காய்
விலையேறி போகுது மார்க்கெட்டுல……..

அன்னாடம் நாட்டுல
வெண்டைக்காய் சுண்டைக்காய்
விலையேறி போகுது மார்க்கெட்டுல……..

விலையேறி போகுது மார்க்கெட்டுல……..

என்னாட்டம் ஏழைங்க
அதைவாங்கி திங்கத்தான்
துட்டுயில்ல சாமியே பாக்கெட்டுல….

துட்டுயில்ல சாமியே பாக்கெட்டுல….

வீட்டுக்கு வீடு எங்களத்தான்
மரம் ஒன்னு வைக்க சொல்லூறாக

மரமே தான் எங்க வீடாச்சு சாமி
ஏழைங்க வாயை மெல்லூறாக
எல்லாரின் வாழ்வும்
சீராக வேணும் ஒன்னால தான்….
கண்ணால பாரு
வேறாக்கி காட்டு ஒன்னால தான்…..

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

ஊர் சுத்தும் சாமியே
நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே

ஊர் சுத்தும் சாமியே
நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே..

ஊர் சுத்தும் சாமியே
நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே..

என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே..

எல்லோரும் போல் என்னை
நீயும் தான் தள்ளாமே
எந்நாளும் தான் காக்கனுமே
உன்கிட்ட ஓர் வரம் கேட்கனுமே

எப்போதும் காவல் நானிருப்பேன்
என்னென்ன வேணும் நான் கொடுப்பேன்

பொல்லாங்கு பேசும் ஊர் சனம் தான்
புண்ணாக்கி போச்சே என் மனம் தான்

என்னாட்ட சாமி
எல்லோருக்கும் சொந்தம் எப்போதும் தான்….
விண்ணோடு மேயும்
உன்னோடு நானும் எந்நாளும் தான்……….

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

கொட்டவேனும் மேளம்…..
கையை கட்ட வேணும் யாரும்….
அஞ்சி நிக்கும் ஊரும்….
அருள்வாக்கு சொல்லும் நேரம்…

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி……

என் ராசாவின் மனசிலே

படம்: என் ராசாவின் மனசிலே
பாடியவர்கள்:ஸ்வர்ணா
இசை: இசைஞானி இளையராஜா


பெண்:கூ கூ கூ…..
குயில் பாட்டு ஒஹோ
வந்தென்ன இளமானே
கூ கூ கூ…..
அதை கேட்டு ஒஹோ
செல்வதென்ன மனந்தானே
கூ கூ கூ…..
இன்று வந்த இன்பம் என்னவோ
அதை கண்டு கண்டு
நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ
நீ நான் தானே
இனி உன் ராகம்
அது என் ராகம்

குயில் பாட்டு ஒஹோ
வந்தென்ன இளமானே
கூ கூ கூ…..
அதை கேட்டு ஒஹோ
செல்வதென்ன மனந்தானே
கூ கூ கூ…..

பெண்:
அத்தை மகன் கொண்டாட
பித்து மனம் கின்டாட
அன்பை இனி நெஞ்சில் சுமப்பேன் ஒஹோ…..
புத்தும் புது சின்டாகி
மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஒஹோ…..
மன்னவன் போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்
உத்தரவு போடும் நேரமே
முத்துநகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்
மெளனம் போனதின்று
மோக கீதம் பாடுதே……
வாழும் ஆசையோடு
அது வாசல் தேடுதே…..
கீதம் பாடுதே……
வாசல் தேடுதே……

ஆண்:
குயில் பாட்டு ஒஹோ
வந்தென்ன இளமானே
கூ கூ கூ…..
அதை கேட்டு ஒஹோ
செல்வதென்ன மனந்தானே
கூ கூ கூ…..

பெண்:காலம் இங்கு பூம்பாக வந்த இன்பம் ஏம்பாக
இன்று வரை எண்ணி இருந்தேன் ஒஹோ..
பிள்ளை தந்த ராசாவின் வெள்ளை மனம் பாராமல்
தள்ளி வைத்து தள்ளி இருந்தேன் ஒஹோ..
என் வயிற்றில் ஆடும் தாமரை கை அசைக்க கால் அசைக்க
காத்து வளர்ப்பேன் கற்பகத்து பொற்ப்பதத்து பூவினை அற்புதங்கள்
செய்யும் என்று சேர்த்து முடிப்பேன் மௌனம் போனதென்று
அது கீதம் பாடுதே வாழும் ஆசையோடு


குயில் பாட்டு ஒஹோ
வந்தென்ன இளமானே
கூ கூ கூ…..
அதை கேட்டு ஒஹோ
செல்வதென்ன மனந்தானே
கூ கூ கூ…..

அவள் ஒரு தொடர்கதை

படம்:அவள் ஒரு தொடர்கதை
பாடியவர்:ஜேசுதாஸ்

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு……

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன

நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா
இல்லை என் பிள்ளை என்னை கேட்டுப் பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இது என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு இதில் நானென்ன அடியே நீயென்ன
ஞானப் பெண்ணே வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதையென்ன

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு…
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு…

வெறும் கோயில் இதிலென்ன அபிஷேகம்
உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இது தான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன இதில் தாயென்ன
மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே வாழ்வின்
பொருளென்ன நீ வந்த கதையென்ன

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி கண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதையென்ன

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு……

மலைக்கோட்டை பாடல்வரி

படம்: மலைக்கோட்டை
இசை: மணிஷர்மா
பாடியவர்: ராகுல் நம்பியார்

ஓ பேபி …நீ தேவாமிர்தம்
பேபி..நீ பஞ்சாமிர்தம்
பேபி ..நீ புஷ்பத்தாவரம்
ஓ பேபி…நீ தீபாவளி
பேபி…நீ சூராவளி
பேபி …நீ வாச மார்கழி

அம்மாடி அவ பாதம் பட்டா பாற பூவாகும் அப்பாடி
அவ கையி பட்டா நீரும் சாராயம் ஐயோடி
அவ என்ன என்ன தொட்டா என்னாகும்

ஓ பேபி …நீ தேவாமிர்தம்
பேபி..நீ பஞ்சாமிர்தம்
பேபி ..நீ புஷ்பத்தாவரம்

ஏ ஆலமர காக்கா அவ சோறு வைக்க ஏங்கும்
ஏ ஓடக்கர மீனு அவ கால கொத்த ஏங்கும்
ஏ காஞ்சிபட்டுச் சேல அவ கட்டிக் கொள்ள ஏங்கும்
ஏ நாகலிங்க பூவு அவ வாசத்துக்கு ஏங்கும்
சோல காத்தாடியா செவத்தப்புள்ள நின்னாடா
செத்துப்போன எல்லாருமே திரும்பி வந்தாண்டா
காதல் பூசாரியா கனவு பூஜை செஞ்சாடா
கல் விழுந்த கொளத்த போல அலம்ப வச்சாடா

அம்மாடி அவ பாதம் பட்டா பாற பூவாகும்
அப்பாடி அவ கையி பட்டா நீரும் சாராயம்
ஐயோடி அவ என்ன என்ன தொட்டா என்னாகும்

நான் காலமெல்லாம் வாழ அவ கண்ணழகு போதும்
என் ஆசை எல்லாம் பேச அவ காதழகு போதும்
நான் தாலிக்கட்டும் போது அவ தல குனிஞ்சா போதும்
நான் நாலுபுள்ள கேக்க அவ நெகங்கடிச்சா போதும்
ஊத்துத் தண்ணீரா உள்ளுக்குள்ள பூத்தாடா
உலகெல்லாம் அவதான்னு உணர வச்சாடா
காத்து கருப்பாட்டம் கண்ணோட சேர்ந்தாடா
கனவுக்குள்ள ஸ்ரீதேவியா கதபடிச்சாடா

அம்மாடி அவ பாதம் பட்டா பாற பூவாகும்
அப்பாடி அவ கையி பட்டா நீரும் சாராயம்
ஐயோடி அவ என்ன என்ன தொட்டா என்னாகும்

பாலக் பன்னீர்


தேவையான பொருள்கள்
ஸ்பினச்- 1 கப்
பன்னீர்- 250 கிராம்
வெங்காயம்- 1
தக்காளி- 1
இஞ்சி,பூண்டு விழுது-1/2ஸ்பூன்
மல்லி தூள்- 2 தே.
சீரக தூள்- 1 தே.
மஞ்சள் தூள்- 1/2 தே.
காரம்மசலா தூள்- 1 தே.
எண்ணெய்- 3 மே.
மல்லி தளை- 1/2 கட்டு
உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை
முதலில் உங்களுக்கு பிடித்த வடிவில்பன்னீரை கட் செய்து கொள்ளுங்கள்சட்டியில் கொஞ்சமா எண்ணெய் விட்டு கட் செய்த துண்டுகளைபொரித்தெடுங்கள்.
பன்னீர் பொரித்த சட்டியிலேயே மீதி இருக்கும் எண்ணெயில் சேர்த்துசூடாக்கி வெங்காயத்தை போட்டு வதக்கவும் வெங்காயம் வதங்கி வரும்போது இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரைவதக்கவும் இப்போ மீதி இருக்கிற அனைத்து பொருட்களையும், கீரையையும்போட்டு இரண்டு நிமிடங்களுக்கு வதக்கி எடுங்க. சூடு ஆறியதும் மிக்ஸியில்போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும் அரைத்த கலவையை சூடாக்கி
அதில் பொரித்த பன்னீரை போட்டு இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டுஇறக்கினால் பாலக் பன்னீர் ரெடி.


டுனா பிரட்டல்


தேவையான பொருள்கள்
TUNA-185G
வெங்காயம்-2
தக்காளி-1
பச்சை மிளகாய்-2
இஞ்சி,பூண்டு-1ஸ்பூன்
மீளகாய் பொடி-1ஸ்பூன்
கருவாயிலை-1கொத்து
எண்ணை-2ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை

சட்டியில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும் பின் தக்காளி,பச்சை மிளகாய்,கருவாயிலை போட்டு நன்கு வதக்கவும் வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுது போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும் பின் அதில் மிளகாய் பொடி போட்டு TUNAவை கொட்டி வதக்கவும் 5நிமிடம் மூடி வைக்கவும் உப்பு அதில் இருக்கும் உப்பு சரியாக இல்லை என்றால் உங்கள் விருப்பம் போல் உப்பு சேர்த்து கொள்ளவும் பின் நன்கு கிளறவும் இறக்கவும்.

வட்டத்துக்குள் சதுரம் பாடல்வரி

படம் : வட்டத்துக்குள் சதுரம்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பி.எஸ்.சசிரேகா, எஸ்.ஜானகி


இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

ஓடுது ரயில் பாதை மனம் போலவே
பாடுது குயில் அங்கே தினம் போலவே
மா மரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
பார்த்தது எல்லாம் பரவசம் ஆகும்
புதுமைகள் காண்போம் என்னாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன் கொண்ட மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அணுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

பூவேலி பாடல்வரி

படம் : பூவேலி
இசை : பரத்வாஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன், சுஜாதா

காண்பதில் எல்லாம்
தலைகீழ் தோற்றம்
என்னொடு ஏனோ
இத்தனை மாற்றம்

பூமி என்பது தூரம் ஆனதே
நட்சத்திரங்கள் பக்கம் வந்ததே
மனிதர் பேசும் பாஷை மறந்து
பறவைகளோடு பேச தோணுதே
காணும் பிம்பம் கண்ணில் மறைந்து
காணா உருவம் கண்ணில் தோணுதே
அன்பு திருமுகம் தேடி தேடி
கண்கள் என்னை தாண்டி போகுதே

இதற்கு பெயர் தான் காதலா…காதலா
இதற்கு பெயர் தான் காதலா…காதலா


புரியா மொழியோ புரிந்து போகும்
புரிந்த மொழியோ மறந்து போகும்
சரியாத உடை சரி செய்வதாக
சரியாய் இருந்தும் சரியச் செய்யும்
நிலவை போலவே இருளும் புடிக்கும்
உணவை போலவே பசியும் ருசிக்கும்
எந்த பேனா வாங்கும் பொழுதும்
என்னவள் பெயர் தான் எழுதிப்பார்க்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

கண்ணாடி முன்னே பேசிப் பார்த்தால்
வார்த்தைகள் எல்லாம் முந்தி அடிக்கும்
முன்னாடி வந்து பேசும் பொழுதோ
வார்த்தைகள் எல்லாம் நொண்டி அடிக்கும்
பாதிப் பார்வை பார்க்கும் போதே
பட்டாம் பூச்சிகள் நெஞ்சில் பறக்கும்
கல்லில் இருந்தும் கவிதை முளைக்கும்
காகிதம் மணக்கும் கண்ணீர் இனிக்கும்

இதற்கு பெயர் தான் காதலா…காதலா
இதற்கு பெயர் தான் காதலா…காதலா



கண்கள் என்னும் இரண்டு ஜன்னல்
திறந்து வைத்தும் மூடிக் கொள்ளும்
இதயம் என்னும் ஒற்றைக் கதவு
மூடி வைத்தும் திறந்து கொள்ளும்
நீ என்பது நீ மட்டும் அல்ல
மூளையின் மூலையில் ஒரு குரல் கேட்கும்
நான் என்பதின் இன்னொரு பாதி
யார் என்பதை இதயம் கேட்கும்

இதற்கு பெயர் தான் காதலா…காதலா….
இதற்கு பெயர் தான் காதலா…காதலா….

சளி பிடிக்காமல் இருக்க:



சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.
அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது.
அதில் வைட்டமின் 'c' இருக்கிறது.வைட்டமின் 'c' ஜலதோஷம் பிடிக்காமல்
தடுக்க உதவியாய் இருக்கிறது.

நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால்
மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று
முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.


வழங்கியவர்:பாயிஷா அஹமது

கடலுக்கு அடியில்




வழங்கியவர்:பயிஷா அஹமது

வியாபாரி பாடல் வரி

படம்:வியாபாரி
பாடியவர்:ஹரி ஹரன்

ஆண்:ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயும்
அம்மாவ வாங்க முடியுமா

குட்டீஸ்:ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா

ஆண்:ஆயிரம் உறவு உன்ன தேடி வந்து நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா

குட்டீஸ்:ஆயிரம் உறவு உன்ன தேடி வந்து நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா

ஆண்:உன்னையும் என்னையும் படச்சதிங்கே
யாருடா தெய்வமும் ஒவ்வொரு வீட்டில்
இருக்குதுன்னா அது தாயடா

குட்டீஸ்:உன்னையும் என்னையும் படச்சதிங்கே
யாருடா தெய்வமும் ஒவ்வொரு வீட்டில்
இருக்குதுன்னா அது தாயடா

ஆண்:ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயும்

லாலாலலா லாலாலலா லாலாலலா லாலலா
லாலாலலா லாலாலலா லாலாலலா லாலலா

ஆண்:பட்டினியா கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி மறப்பா
இளவட்டம் ஆன பின்னும் எண்ண தேச்சி குளிக்க வப்பா
உச்சி முதல் பாதம் வர உச்சு கொட்டி மகிழ்திடுவா
நெஞ்சிலே நடக்க வைப்பா நிலாவ பிடிக்க வைப்பா
பிஞ்சி விரல் நெகம் கடிப்பா பிள்ளை அற்ற சோறு திம்பா
பல்லு முளைக்க நெல்லு முனையால் மெல்ல மெல்லதான் கீரி விடுவா

உன்னையும் என்னையும் படச்சதிங்கே யாருடா தெய்வமும்
ஒவ்வொரு வீட்டில் இருக்குதுன்னா அது தாயடா

குட்டிஸ்:ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயு அம்மாவ வாங்க முடியுமா

ஆண்:மண்ணில் ஒரு செடி முலைச்சால் மண்ணுக்கது பிரசவம்தான்
உன்னை பெற துடி துடிச்சா அன்னைக்கது பூகம்பம்தான்
சூரியனை சுத்தி கிட்டே உன்னை சுற்றும் பூமியம்மா
பெத்தெடுத்த பிள்ளை சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா
கற்பத்தில் நெலிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா
பேதை போல் அவள் இருப்பா மேதையாய் உனை வளர்ப்பாள்

என்ன வேண்டும் இனி உனக்கு அன்னை மடியில் சுகம் இருக்கு
என்ன வேண்டும் இனி உனக்கு அன்னை மடியில் சுகம் இருக்கு

கண்டேன் காதலை பாடல்வரி

படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: உதித் நாராயணன், கார்த்திக்

வெண்பஞ்சு மேகம் என்பேனா
பொன் மஞ்சள் நேரம் என்பேனா
பொன் தோன்றும் கோளம் என்பேனா
என் அன்பே என் அன்பே
சில்லென்ற சாரல் என்பேனா
சில்வண்டு பாடல் என்பேனா
உள்ளத்தின் தேடல் என்பேனா
என் அன்பே என் அன்பே
என்னென்று உன்னை சொவது
மொழி இல்லை சொல்ல என்னிடம்
பொய் இல்லை என்ன செய்வது
எனதுள்ளம் இன்று உன்னிடம்
உன்னாலே உன்னாலே உன்னாலே
மண் மேலே மண் மேலே மண் மேலே
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
ஓஹோ ஹோ ஹோ ஹோ

(வெண்பஞ்சு..)

கண்கள் இரண்டை காதல் வந்து சந்திப்பதேன்
இல்லை இல்லை தூக்கம் என்று வஞ்சிப்பதேன்
உள்ளம் உன்னை ஏந்திக்கொள்ள சிந்திப்பதேன்
கொள்ளைக்கொண்டு போனப்பின்பும் மண்ணிப்பதேன்
உன் கையை சென்றிடவே என் கைகள் நீளுவதேன்
உன் பேரைக் கேட்டதுமே தார்சாலைப் பூப்பது ஏன்
பூத்தப் பூக்கள் அடிக்கடி சிரிப்பதும் ஏன்
முதுகினில் சிறகுகள் முளைப்பது ஏன்
என் ஆசைகள் உன்னை சொல்வது
நீ ஆயுதம் இன்றிக் கொல்வதேன்

(கண்டேன்..)

குட்டிக்குட்டி சேட்டை செய்து ஒட்டிக்கொண்டாய்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி என்னை கொத்திச்சென்றாய்
தள்ளித்தள்ளிப் போனப் பின்னும் பக்கம் வந்தாய்
இன்னும் இன்னும் மேலே செல்ல இரக்கை தந்தாய்
எல்லாமே மாறிவிடும் சொன்னாலே மீண்டுவர
சொல்லாமல் மாற்றத்தைத் தந்தாயே நான் மலர
உன்னைவிட அதிசயம் உலகில் இல்லை
ஏய் அழகியே அவஸ்தையும் எதுவுமில்லை
என் தேவதை உன்னை எண்ணியே நான் நீங்கியதென்ன
என்னையே..

(கண்டேன்..)

நினைத்தாலே இனிக்கும் பாடல் வரி

படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்: விஜய் அந்தோணி

யு நோ லேடீஸ்
இஸ் ஸ்டார்ட் ஸோஸ் ஆப்
ரியல் லவ்
மெரே பியா
கும்பா
கும்தலக்கடி கும்பா
கும்பா
கும்தலக்கடி கும்பா
ஏ ஏ ஏ ஏ
யா யா யா
ஏ ஏ ஏ ஏ
யா யா யா

பனாரஸ் பட்டு கட்டி…
யா யா
மல்லிப்பூ கொண்டை வச்சி…
யா யா
சிங்கப்பூர் சீமாட்டி என் மனசை கெடுத்தா..
யா யா
அவ முந்தான பூவ கண்டு…
யா யா
என் உயிரு புட்டுக்குச்சு…
யா யா
சிந்தாம சிதறாம என் கதைய முடிச்சா…
யா யா

மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா

பனாரஸ்..

உன் மூச்சு வாசனையில் ரோஜாக்கள் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
உன்னுடைய பேச்சினிலே ரிங்டோன்கள் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
உன் விழியின் ஓசையிலே டாஸ்மார்க்கள் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
மயிலே உன் மாராப்பில் மல்கோவா டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்

மெரே பியா மெரே பியா பியா ஓ ப்ரியா
மெரே பியா மெரே பியா பியா ஓ ஃப்ரியா
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா

பனாரஸ்..

பளபளக்குது உன் மேனி கண்ணாடி டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
ராத்திரி நீ கண் முளிச்சா நட்சத்திரம் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
பக்கத்திலே நீ வந்தா பல்ஸ் ரேட்டு டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
உன்னை பார்த்த நாள் முதலா ஃபுல் மீல்ஸு டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்

மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா

பனாரஸ்..

ஆதவன் பாடல்வரி

படம்: ஆதவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: கே.எஸ். ரவிக்குமார்

ஆண்:
அன்பே உன்னால்
Brezzing
அடடா காதல் என்றும்
amzesing
எக்ஸ் கியூஸ்மி லெ மி டெல் யூ
Something
நீ சிரித்தால் ஐ போன்
tring tring

பேசும் அம்பு என் மேல்
பாய
காதல் வந்து ஆள
ஆள
வாராயோ என்னை
காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன்
வாழ

பெண்:
ஆ லெமி லெமி லோமோ
நிசி நிசி
ஆ லெமி லெமி லோமோ
நிசி நிசி
ஆ லெ லெ லெமோ
நிசி நிசி
ஆ லெ லெ லெமோ
நிசி நிசி

ஆண்:
ஹசிலி பிசிலி என் ரசமடி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்கலி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுக்கலி…
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி…
அஞ்சனா… அஞ்சனா ….
கொஞ்சினால்…. தேன் தானா….
என் கனா… என் கனா…
என்றுமே… நீ தானா….

ஹசிலி பிசிலி என் ரசமடி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்கலி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுக்கலி…
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி…

பெண்:
கெலோ மிகனா கெலோ மிகனா
கனா கனி
கெலோ மிகனா கெலோ மிகனா
கனா கனி…….

ஆண்:
ஹ ஹ ஹா
ஹே நீயே ஓ…ஒ….

பெண்:
கெலோ மிகனா கெலோ மிகனா
கனா கனி
கெலோ மிகனா கெலோ மிகனா
கனா கனி…….

ஆண்:
உரசாமல் அலசாமல்
உயிரோடு ஊறுது ஆசை
அதுங்காமல் இதுங்காமல்
இருந்தால் தான் ஓய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகனை
உனக்கு இது தான் ஈடுயினை
உன் எடையோ ஊசி முனை
உடைந்திடுமோ சேரு எனை

பெண்:
ஏன் என்னை தீண்டினாய் வெப்பமாய்
நான் உனக்கு பூக்களின் நுட்பமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சி கொண்றாய்

ஆண்:
ஹசிலி பிசிலி என் ரசமடி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்கலி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுக்கலி…
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி…

அன்பே உன்னால்
Brezzing
அடடா காதல் என்றும்
amzesing
எக்ஸ் கியூஸ்மி லெ மி டெல் யூ
Something
நீ சிரித்தால் ஐ போன்
tring tring

பேசும் அம்பு என் மேல்
பாய
காதல் வந்து ஆள
ஆள
வாராயோ என்னை
காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன்
வாழ

வாழ…வாழ….
நான் வாழ வாழ
ம்…வோவ்….

பெண்:
உயிரோடு உயிரோடு என்னை கொள்ள நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் நெருங்குகிறாயே
யார் இவளின் யார் இதழோ
வேர்த்து விடு வேங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை
எத்தனையோ மெத்தைகளோ

ஆண்:
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்த தீயா மெத்தை தீயா

ஹசிலி பிசிலி என் ரசமடி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்கலி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுக்கலி…
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி…
அஞ்சனா… அஞ்சனா ….

பெண்:
கொஞ்சினால்…. தேன் தானா….

ஆண்:
என் கனா… என் கனா…

பெண்:
என்றுமே… நீ தானா….

ஆ லெமி லெமி லோமோ
நிசி நிசி
ஆ லெமி லெமி லோமோ
நிசி நிசி
ஆ லெ லெ லெமோ
நிசி நிசி
ஆ லெ லெ லெமோ
நிசி நிசி…..

சனி, ஜனவரி 23, 2010

கீரை பன்னீர் பொறியல்


தேவையான பொருள்கள்
கீரை-2கப்
பன்னீர்-10துண்டுகள்
வெங்காயம்-1
தக்காளி-1
இஞ்சி,பூண்டு-1ஸ்பூன்
தனியா பொடி-1/2ஸ்பூன்
சிரகம் பொடி-1/2ஸ்பூன்
கரமாசாலா-1ஸ்பூன்
கடுகு,உளுந்து-1ஸ்பூன்
வற மிளகாய்-3
எண்ணை-2ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை
சட்டியில் எண்ணை ஊற்றி அதில் பன்னீரை பொறித்து எடுத்து கொள்ளவும் பொறிக்காமலும் போடலாம் பின் அந்த எண்ணையிலேயே கடுகு,உளுந்து,வறமிளகாய் போட்டு பின் வெங்காயம் போட்டு வதக்கவும் அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும் பச்சை வாசம் போனதும் தக்காளி,மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும் தக்காளி வதங்கியதும் அதில் எல்லாப் பொடிகளையும் போட்டு வதக்கவும் பின் கீரையை போட்டு வதக்கவும் பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் பன்னீர்,உப்பு போட்டு கொதிக்கவிடவும் கீரை வெந்ததும் நன்கு கிளறி தண்ணீர் எல்லாம் வத்தியதும் இறக்கவும்.

குழந்தைக்குக் காய்ச்சலா?


குழந்தைக்குத் திடீரெனக் காய்ச்சலடித்தால் நாம் என்ன செய்வோம்? அடுத்த நிமிடமே மருத்துவரிடம் தூக்கிக்கொண்டு ஓடுவோம். அங்கே மொய் எழுதிய பிறகு தான் நம் படபடப்பு அடங்கும். அதுவரை நமக்கு இருப்புக் கொள்ளாது. கொஞ்சம் நிதானமாக யோசித்தால் குழந்தைக்குக் காய்ச்சல் என்றதுமே மருத்துவரிடம் காட்ட ஓட வேண்டுமென அவசியமில்லை. காய்ச்சல் குறைய நீங்கள் கீழ்க்கண்ட சில விஷயங்களை பின்பற்றலாம். அது குழந்தைக்கு இதமளிக்கும். காய்ச்சலையும் கட்டுப்படுத்தும்.

குழந்தைக்கு அணிவித்துள்ள ஆடைகள், உள்ளாடைகள், நாப்கின் அனைத்தையும் நீக்கவும். குழந்தை படுக்கையிலேயே இருக்க விரும்பினால் அதை மெல்லிய பெட்ஷீட்டினால் போர்த்திப் படுக்கச் செய்யவும். அழுத்தமான துணியால் போர்த்தினால் அவற்றை குழந்தை வெப்பமாக உணரலாம். திடீரென ஏற்படும் காய்ச்சலுக்கு என்ன மருந்து கொடுக்கலாம் என மருத்துவரிடம் முன் கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை கொடுங்கள். உடனடியாகக் காய்ச்சல் இறங்குமென எதிர்பார்க்காதீர்கள். குறைந்தது அதற்கு ஒரு மணி நேரமாவது பிடிக்கும்.

ரொம்பவும் சூடாகவோ, ரொம்பவும் குளிர்ச்சியாகவோ இல்லாதபடி சிறிது சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிய துணியை நனைத்துப் பிழிந்து, குழந்தையின் முகம், கைகள், மார்பு, முதுகு, கால்கள் ஆகிய இடங்களைத் துடைத்து விடுங்கள். அதன் உடல் தானாக காயட்டும். ஒரு வேளை குழந்தைக்கு நடுக்கம் ஏற்படுகிற மாதிரித் தெரிந்தால் தண்ணீரால் துடைப்பதை நிறுத்திவிடவும். கொதிக்க வைத்து, ஆற வைக்கப்பட்ட சுத்தமான
தண்ணீரையோ, அல்லது நீர்த்த பழச்சாற்றையோ குழந்தைக்குக் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கிற குழந்தையானால் ஒரு மணி நேரத்திற்கொருமுறை பாலூட்டலாம்.

டிவி பார்ப்பதால்


பிரிட்டனில், “டிவி" பார்ப்பதிலும் கம்ப்யூட்டரில் விளையாடுவதிலும், பெரும்பாலான குழந்தைகள் நேரத்தை கழிக்கிறார் கள். இதனால், அவர்களிடத்தில் பேச்சு திறன் குறைந்து போகிறது என்று ஆய்வு கூறுகிறது. பிரிட்டன் குழந்தைகளின் பேச்சுத் திறன் குறித்து சர்வேயை அரசு தகவல் தொடர்பு அதிகாரி ஜீன் கிராஸ் நடத்தினார்.
இந்த சர்வேயில் பிரிட்டனில் பெரும்பாலான குழந்தைகள் “டிவி" பார்ப்பதிலும், கம்ப்யூட்டரில் விளையாடுவதிலும் பொழுதை கழிக்கின்றனர். அப்போது, அவர்களிடத்தில் பேசுவதற்கான வாய்ப்பு குறைகிறது. இதன் மூலம் ஆறில் ஒரு குழந்தைக்கு பேசும் திறன் குறைவாக உள்ளது என்று இந்த சர்வே கூறுகிறது.

இந்த சர்வே மேலும் கூறுகையில், 25 சதவீத பிரிட்டன் இளைஞர்கள் தங்களது பேசும் திறனில் சில குறைபாடுகளுடன் உள்ளனர். 5 சதவீதம் பேர் முக்கிய குறைபாடுகளோடு இருக்கின்றனர். சிறுமியரை பொருத்தமட்டில் 13 சதவீதத்தினர் சிறு குறைபாடுகளோடும், 2 சதவீதம் பேர் முக்கிய குறைபாடுகளோடும் இருக்கின்றனர். பெண் குழந்தைகளில் 34 சதவீதம் குழந்தைகள் முதல் வார்த்தையை, பிறந்த 10 அல்லது 11வது மாதத்தில் உச்சரித்து விடுகின்றனர்.

தாயின் மனநிலையே சேயின் மனநிலை


தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.

ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.

· கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.

· குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.

· மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.

· எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.

· அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.

· கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

· அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

· சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.

· மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.

· கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

· மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.

· அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

· இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

கரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.

மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.

வெள்ளி, ஜனவரி 22, 2010

பீமா பாடல்வரி


எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்,
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, தரும் பூக்களே,
நீளுமே காதல் காதல் வாசமே..

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.


இனி இரவே இல்லை,
கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை.
இனிப் பிரிவே இல்லை,
அன்பே உன் உளரலும் எனக்கு இசை..

உன்னைக் காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே
எழுதிப்போனாய் நல்ல ஓவியம்..

சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்.

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.


மரமிருந்தால் அங்கே என்னை
நான் நிழலென விரித்திடுவேன்..
இலை விழுந்தால் ஐயோ என்றே
நான் இருதயம் துடித்திடுவேன்.

இனிமேல் நமது இதழ்கள் இணைந்து
சிரிக்கும் ஓசை கேட்குமே
நெடுநாள் நிலவும் நிலவின்,
களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே

உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே..

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்,
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, தரும் பூக்களே,
நீளுமே காதல் காதல் வாசமே

தவம் பாடல்வரி


கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
என் விழியோரமாய் மை எடுப்பாயட........
என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா
என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு..

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

நீ இல்லாமலே நான் உன்னை காதலிக்கிரேன்..
இதழ் சொல்லமலே நான் உன்னை காதலிக்கிரேன்..
அதிகாலை எழுந்து கோலம் போட்டு கொண்டேன்...
அழகாக உடுத்தி பொட்டு வைத்து கொண்டேன் ...
நான் உன்னை காதலிக்கிரேன்..
மனிதர்கள் உருகும் நேரத்தில் தேவதயாயிருந்தேன்
நான் உன்னை காதலிக்கிரேன்
உன்னை காத்லிக்கிரேன்.....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
நீ அழைப்பாயென நான் இங்கு காத்திருக்கிரேன்...
எனை மணப்பாயென நான் இங்கு காத்திருக்கிரேன்...
மனதாலே உன்க்கு மாலை மற்றி கொண்டேன்
கனவாலே உனக்கு மனைவியாகி கொண்டேன்
நான் இங்கு காத்திருக்கிரேன்
காலங்களை மறந்து அசையாத சிலையாக அவன்மேல்
நான் இங்கு காத்திருக்கிரேன்..இங்கு காத்திருக்கிரேன்

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
என் விழியோரமாய் மை எடுப்பாயட........
என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா
என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு..

கண்ணாமுச்சி ஏனடா பாடல்வரி


மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே
படுத்தால் இரவிலே என் துக்கம் என்னை திட்டும்
விழியின் இடையிலே ஒர் காதல் செருகி கொட்டும்
நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க...

மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே

பாதயின் ஓரத்தில் நடந்து நானும் போகையில்
முகத்தைகாட்ட மறுத்திடும் ஒற்றை குயிலும் கூவுதே...
காலையில் எழுந்ததும் ஓடி சென்று பார்க்கிரேன்
நேற்று பார்த்த அணில்களின் ஆட்டம் இன்றும் தொடருதே
முதன் முதல் வாழ்வில் தோன்ற்றும்
வண்ணகுழப்பம் வானவில்தானா
நதிகளில் வாழ்ந்தே பழகி கடலை
கண்டால் தாவிடும் மீனா
போதும் போதும் என்றே உள்ளம்
எச்சரிக்கை செய்யும் போதும்
வேண்டும் வேண்டும் என்று
கேட்க்கும் மனதின் உள்ளே இன்னோர் உள்ளம்
நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க...


மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே

கடற்கரை சாலையில் காற்று வீசும் மாலையில்
பேசிக்கொண்டு செல்வதய் கனவுகண்டு விழிக்கிரேன்
கலைகளை தீண்டிடுக் அலைகளாக மாரினேன்
சேர்த்துகொள்ள சொல்லியே
மீண்டும் மீண்டும் போகிரேன்
வலித்திடும் நெஜ்சில் நெஜ்சில்
வழியும் உதிரம் இனிப்பது ஏனோ
மற்முரை பார்க்கும் வரையில்
காற்றும் நேரமும் கசப்பது ஏனோ
பகலில் தூங்கும் வெண்ணிலாவும்
வெளியில் வந்த்துதானே தீரும்
அந்த நேரம் வந்ததாக நெஞ்சின் உள்ளே எதேகூரும்

நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க...

மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே
படுத்தால் இரவிலே என் துக்கம் என்னை திட்டும்
விழியின் இடையிலே ஒர் காதல் செருகி கொட்டும்
நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க...

மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே

வியாழன், ஜனவரி 21, 2010

ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்


சரித்திர காலத்துக்கும் இப்போதைய விஞ்ஞான யுகத்துக்கும் முடிச்சு போட்டுள்ள ஆக்ஷன் கதை...

சோழ பாண்டியர் போரில் பாண்டிய மக்கள் குல தெய்வமாக வழிபடும் சாமி சிலையை சோழ மன்னன் கவர்ந்து போகிறான். வியட்நாம் அருகில் உள்ள மிட்சு தீவில் சோழன் இறுதி காலத்தில் பதுங்கியதாக தகவல். எண்ணூறு ஆண்டுகளுக்கு பிறகு தொல்லியல்துறை பேராசிரியர் பிரதாப் போத்தன் சோழ நாகரீகம் பற்றி ஆய்வு செய்ய அத்தீவுக்கு போகிறார். அவர் திரும்பவில்லை. பிரதாப்பை கண்டுபிடிக்க தொல்லியல் துறை அதிகாரி ரீமாசென் தலைமையில் அரசு குழு அனுப்புகிறது. ராணுவ வீரர்கள், பிரதாப் போத்தன் மகள் ஆண்ட்ரியா ஆகியோரும் குழுவில் செல்கின்றனர். அவர்களுக்கு எடுபிடி வேலை செய்ய கார்த்தியும் அவர் நண்பர்களும் போகிறார்கள்.

இந்த சாகச பயணத்தில் சந்திக்கும் ஆபத்துகள் சீட் நுனிக்கு இழுக்கும் ஹாலிவுட் திகில்... நிறைய உயிர்ப்பலிக்கு பின் சிதைந்து கிடக்கும் சோழ நகரை அடைகின்றனர். அங்கு இன்னும் சாகாமல் வாழும் சோழ மன்னன் பார்த்திபனும் மக்களும் பஞ்சத்தில் சிக்கி சக ஆட்களையே கொடூரமாக கொல்பவர்களாக அறிமுகமாக அதிர்ச்சி. காட்டு மிரண்டித்தனமான அக்கூட்டத்தில் சிக்கி கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா மூவரும் ஜீவமரண போராட்டம் நடத்துகின்றனர்.

சோழனை அழிக்க கூடுதல் ராணுவம் வருகிறது. அதன் பிறகு நடப்பவை எதிர்பாராத திருப்பங்கள். கதை களமும் காட்சி அமைப்புகளும் தமிழுக்கு புதுசு... கப்பலில் சோழர் தீவுக்கு புறப்படுவதும் அத்தீவில் பேய் இருக்கிறது. போனவர்கள் திரும்பவில்லை என்று “கெய்டு”கள் வர மறுப்பதும் பயங்கரத்தை பதிவு செய்கிறது. தீவுக்குள் ஆற்றை கடக்கும் போது வெளிச்சத்தை உமிழ்ந்தபடி ஒரு வகை உயிரினம் தண்ணீரில் மிதந்தும் பறந்தும் வந்து ரத்தம் உறிஞ்சி சாகடிப்பது உதறல். காட்டுவாசிகளுடன் நடக்கும் சண்டை... பாம்பு கூட்டத்தில் சிக்குவது... பாலைவனத்தில் புதை மணலை கடப்பது... மிரட்சியானவை.

பிற்பகுதி கதை சோழ மன்னன் குகைக்குள் முடங்குகிறது. தங்கள் மக்களையே கொன்று கூத்தாடும் காட்டு மிராண்டிதனமான சோழ நாகரீகம் அறியப்படாதது. அந்த கூட்டத்தில் தமிழில் புலமை காட்டும் சோழ மன்னன் முரண்படுகிறார். சோழ மக்களின் வறுமையும் மாமிச உணவுக்கு சண்டையிடுவதும் பரிதாபப்பட வைக்கின்றன.

கார்த்தி எம்.ஜி.ஆர். ரசிகராக கலகலப்பாக வருகிறார். ரீமாசென், ஆண்ட்ரியாவை கலாய்க்கும் பஞ்ச் வசனங்கள் சிரிப்பலை. ஆண்ட்ரியா மேல் காதல் பார்வை வீசுவதும்... ரீமாசென் குறுக்கிடுவதும் ரகளை... பாம்பு கூட்டத்தில் இருந்து இருவரையும் தோளில் தூக்கி ஓடுவது வயிற்றை புண்ணாக்குகிறது. இரும்பு குண்டை வீசி ஆட்களை கொல்லும் தடியனை வீழ்த்துவது கைதட்டல்... ரீமாசென் சண்டையில் மிடுக்கு காட்டுகிறார். சோழ கோட்டைக்குள் புகுந்ததும் பாண்டியன் வாரிசு என்று தன்னை பிரகடனபடுத்துவதும் சோழ மன்னனை அழிக்க வகுக்கும் வியூகங்களும் எதிர்பாராதவை. சிறுநீர், அரை நிர்வாணம் வக்கிரமங்களை தவிர்த்து இருக்கலாம்.

சோழ மன்னனாக வரும் பார்த்திபன் வித்தியாச பரிணாமம் காட்டுகிறார். ஆண்ட்ரியா பளிச்சிடுகிறார். அழகம் பெருமாள் மிடுக்கான ராணுவ அதிகாரி. வித்தியாசமான கதை களத்தை எடுத்து காட்சிகளை புதுமைபடுத்தியுள்ளார் இயக்குனர் செல்வராகவன். ஜி.வி. பிரகாஷ் இசை மிரட்டல், ராம்ஜி ஒளிப்பதிவில் பிரமாண்டம். தனுஷ், ஐஸ்வர்யா பாடியுள்ள “உன் மேலே ஆசை தான்” பாடலும் அது படமாக்கப்பட்டிருப்பதும் அருமை.

தனுஷ் மாமியார் மனீஷா!


தனுஷ் மாமியார் மனீஷா கொய்ராலா!

மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு மாமியாராக நடிக்க பல நடிகைகளை முயற்சி செய்தும், ஒன்றும் சரியாக அமையாமல் இருந்தது. இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி இந்த படத்தில் தனுஷ் மாமியாராக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீதேவியோ கோடிகளில் சம்பளம் கேட்க, 'எல்லாம் நெனப்புதான்' என்று கடுப்புடன் பின் வாங்கியது மாப்பிள்ளை குழு.

அடுத்து தபு உள்பட பல அம்சமான ﮬèè¬÷ˆ தேடித் தேடிப் போய் இந்த வேடத்தில் நடிக்க வைக்க முயற்சித்தார்கள். ஆனால் இவர்களில் யாரும் செட் ஆகவில்லை. இந்த நேரத்தில்தான் மனீஷா கொய்ராலாவை அணுகினார்கள். அவர் தனுஷின் புகைப்படத்தை இரண்டுமுறை திருப்பிப் பார்த்துவிட்டு, ஓகே நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம். சம்பள விஷயத்திலும் பெரிதாக கெடுபிடி செய்யவில்லை என்கிறார்கள்.

கடைசியாக மனீஷா நடித்த தமிழ்ப் படம் பாபா. ரஜினிக்கு ஜோடி. அந்தப் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்டுகளில் மனீஷாவும் ஒன்று என்பார்கள் ரஜினி ரசிகர்கள் இப்போதும்! ரஜினி முன்பு நடித்த வெளிவந்த பிளாக்பஸ்டர் படம்தான் மாப்பிள்ளை. இதில் ரஜினிக்கு மாமியாராக மறைந்த ஸ்ரீவித்யா நடித்திருந்தார். அந்தப் படத்தைத்தான் தனுஷ் இப்போது ரீமேக் செய்கிறார்.
நன்றி:தினமலர்

நவ்யாவின் திருமணம்


நவ்யாவின் ஊரான ஹரிப்பாடு அருகே உள்ள செப்பாட் அரசு பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பந்தலில் இந்த திருமணம் நடந்தது. இந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்துக்கு நவ்யாவின் உறவினர்கள், நண்பர்கள் என பலர் திரண்டிருந்தனர். நடிகர்கள் திலகன், சுரேஷ் கோபி, வினீத் போன்றோர் வந்திருந்தனர். இன்று மாலை 6 மணிக்கு மணமகன் சந்தோஷ் மேனனின் ஊரான செங்கனாச்சேரியில் திருமண வரவேற்பு நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு மும்பையில் செட்டிலாகிறார் நவ்யா. அதே நேரம் திரைப்படங்களில் நடிப்பதையும் தொடரவிருக்கிறாராம்.
நன்றி:தினகரன்

கணவாய் பிரட்டல்


தேவையான பொருள்கள்
கனவாய்-1/2கிலோ
வெங்காயம்-2
தக்காளி-1
பச்சை மிளகாய்-2
மிளகாய் பொடி-1ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது-1ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணை-2ஸ்பூன்
ஏலக்காய்-1
கருவாயிலை-2கொத்து
மல்லி இலை-சிறிதளவு

செய்முறை
சட்டியில் எண்ணை விட்டு ஏலக்காய்,கருவாயிலை போட்டு பின் வெங்காயம்,ப.மிளகாய் போட்டு வதக்கவும் வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும் பின் இஞ்சி,பூண்டு போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும் பின் மிளகாய் பொடி,உப்பு போட்டு கிளறி கனவாய் கொட்டி கிளறி 5நிமிடம் மூடி வைக்கவும் பின் கொஞ்சம் தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும் தண்ணீர் வத்தியது நன்கு கிளறி மல்லி தூவி இறக்கவும்.

சிக்கன் டிக்கா


தேவையான பொருள்கள்
சிக்கன்-பத்து துண்டுகள் எலும்பு இல்லாமல்
தயிர்-2ஸ்பூன்
மிளகு பொடி-1/2ஸ்பூன்
மஞ்சள் பொடி-1/2ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
சிக்கன் குத்த குச்சி-2

செய்முறை
சிக்கனில் தயிர்,மஞ்சள் பொடி,மிளகு பொடி,உப்பு,எல்லாவற்றையும் போட்டு நன்கு கழந்து 10நிமிடம் ஊறவைக்கவும் பின்பு குச்சியில் மாட்டி தீ கங்கிள் வைத்து ஒரு பக்கம் வெந்ததும் இன்னொரு பக்கம் திறிப்பி வைக்கவும் நல்லா பொன் நிறம் ஆனதும் எடுக்கவும். எண்ணை சேர்க்காததால் இது உடம்புக்கு நல்லது.ஈசியும் கூட.

கர்ப்ப காலத்தில் உறவு கொள்ளலாமா?

கர்ப்ப காலத்தில் உறவு கொள்ளலாமா என்பதில் பல தம்பதியருக்கும் சந்தேகம்.

கர்ப்ப காலத்தில் உறவு கொண்டால் பிறக்கும் குழந்தைக்கு ஆபத்து வரும் என்ற அச்சமே இதற்குக் காரணம். கர்ப்ப காலத்தில் உறவு கொள்ள விரும்புவோர் கீழ்க் கண்ட விஷயங்களை நினைவில் கொள்வது நலம்.
மனைவி ஆரோக்கியமான உடல் நிலையில், கருப்பை தொடர்பான கோளாறுகள் ஏதுமின்றி, உறவு கொள்வதில் விருப்பமும் உள்ளவளாக இருந்தால், கடைசி மாதம் வரைகூட உறவு கொள்ளலாம்.

எட்டு மாதங்கள் வரை தாராளமாக உறவு கொள்ளும் தம்பதியர் அதற்குப் பிறகு அதை நிறுத்திவிட்டால் நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் ஒன்பதாவது மாதத்துக்குப் பிறகாவது அதைத் தவிர்ப்பது நல்லது.
கர்ப்ப காலம் முழுவதும் உறவே இல்லாமல் இருந்தாலும் நல்லதுதான்.

பெரும்பாலும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மன உளைச்சல் மிக அதிகமாக இருக்கும். அந்நாட்களில் பெரும்பாலும் அவர்களுக்கு உறவில் வேட்கை இருக்காது. அப்படிப்பட்ட நிலையில் அவளைக் கட்டாயப் படுத்தி கணவன் உறவுக்கு சம்மதிக்க வைக்கக் கூடாது. அதனால் அந்தப் பெண் உடலளவில் மட்டுமின்றி, மனத்தளவிலும் பெரிதும் பாதிக்கப்படுவாள். குழந்தையின் மன வளர்ச்சியிலும் பாதிப்பு இருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் உறவு கொள்ளலாமா என்பதை மாதிரியே பிரசவ காலத்துக்குப் பிறகு எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்வது என்பதிலும் பலருக்கும் சந்தேகம்.

குழந்தை பிறந்த ஒரு சில நாட்களிலேயே உறவு கொள்வதை எந்த தம்பதியரும் அனுமதிக்கக் கூடாது.

பிரசவம் எப்படி அமைந்தது என்பது முதலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இயல்பான பிரசவம் என்றால் மனைவியின் உடல் சீக்கிரமே சகஜ நிலையை அடையும். பிரசவத்துக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து உறவில் படலாம்.

சிக்கலான பிரசவமாகவோ, சிசேரியனாகவோ இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே அவர் குறிப்பிடும் நாட்களுக்குப் பிறகே தாம்பத்திய உறவு கொள்ள வேண்டும்.

குழந்தைப் பிறப்பால் பெண்ணின் உறுப்பில் காயங்கள் இருக்கும். அது ஆறி விட்டதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதோடு, கணவனுக்கு தொற்று நோய் ஏதும் இருக்கக் கூடாது.

கர்ப்ப காலத்திலும், அதற்குப் பிறகும் உடல் உறவு கொள்ளும் போது சுத்தம் என்பது மிக முக்கியம். ஒவ்வொரு முறை உறவுக்குப் பிறகும் பெண்ணுறுப்பை முறையாக சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம்.

கருச்சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் உறவுக்கு முன்பு மருத்துவர் ஆலோசனையைப் பெற வேண்டியது முக்கியம்

நன்றி:தினகரன்

கர்ப்ப காலத்தில் முடி உதிருதல்!!


அதற்கு புரோட்டீன், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின் "ஏ' போன்ற சத்துக்கள் குறைபாடே காரணம். எனவே, கர்ப்ப காலத்தில் இச்சத்துகள் நிறைந்த உணவு பொருட்களை அதிகளவில் சேர்த்து கொண்டால், முடி உதிருதல் குறையும். மேலும், சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.
கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாட்டினால், கை, கால்களில் தேவையில்லாத முடிகளின் வளர்ச்சி அதிகம் இருக்கும். வேப்பங்கொழுந்தை கிள்ளி, அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து, முடி இருக்கும் பகுதிகளில் தடவினால், முடிகள் உதிர்ந்துவிடும். கர்ப்பிணி பெண்கள் பக்க விளைவுகள் எதுவும் இல்லாத, அழகு சிகிச்சை முறைகளை மேற்கொள்வதன் மூலம், கருவில் இருக்கும் சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.
நன்றி:தினகரன்

டைனிங் டேபிள் வி‌ரி‌ப்பு?



டைனிங் டேபிள் மீது விரிக்கப்பட்டுள்ள கலர் கலரான விரிப்புகள் பழையதாகிவிட்டால் தூக்கிப் போட வேண்டாம்.

சதுர வடிவிலோ அல்லது வட்ட வடிவிலோ துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

வெட்டிய துண்டுகளை சாப்பிடும்போது தட்டிற்கு கீழேயோ, சாப்பாடு பாத்திரங்களை வைப்பதற்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுமட்டுமல்லாமல், எண்ணெய்ப் பாத்திரங்கள், சூடான பா‌த்‌திர‌ங்க‌ளு‌க்கு‌க் கீழேயும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலு‌ம் கா‌ய்க‌றி நறு‌க்கு‌ம் போது இ‌ந்த‌த் து‌ண்டுகளை‌ ‌‌‌கீழே பய‌ன்படு‌த்‌தினா‌ல், தரை‌யி‌ல் ‌கீற‌ல் ‌விழாம‌லு‌ம் த‌வி‌ர்‌க்கலா‌ம்.

நன்றி:தினகரன்

தொப்பை குறைய பகுதி1

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் கொண்டு அனைவருக்குமே பெரும் பிரச்னையா இருப்பது உடல் பருமன் தான். அதிலும், அடிவயிற்றில் சதைப்பிடிப்பு அதிகமாக இருந்தால் உடல் அழகே கெட்டுவிடும். தொப்பையால் தங்கள் அழகு கெட்டுவிட்டதே என்று பல பெண்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

உடல் எடை அதிகரிப்பதற்காக அதிகமாக சாப்பிட ஆரம்பித்தாள்; ஆனால், அவள் எடை கூடவில்லை. மாறாக, அவளது அடிவயிற்றில் மட்டும் அதிமாக சதை வைத்து தொப்பை விழுந்து விட்டது. அவளது தொப்பையைக் குறைக்க ஏதாவது வழி சொல்லுங்களேன் என்று கடிதம் எழுதியிருந்தார். உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாமே ஒழிய தொப்பையைக் கரைக்க முடியாது.

தொப்பையால் வயிற்றில் சதைப்பகுதி கொஞ்சம் தளர்ந்து விடும். அதைச் சரிசெய்யவும், வலுவானதாக்கவும் கொஞ்சம் பயிற்சிகளை மேற்கொள்வதுதான் சிறந்தவழி.

வயிற்றுப் பகுதியை வலுவாக்க பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் பயிற்சியாளர்களிடம் கேட்டு, அவர்கள் ஆலோசனைப் படி பயிற்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மற்றபடி உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது. எனவே, தினமும் காலை, மாலை வேளையில் ஒரு கிலோ மீட்டர் தூரமாவது நடப்பது உடலுக்கு நல்லது. அதிலும், காலையில் நடப்பது நல்ல பலன் தரும். அதேபோல், இரவு உணவிற்கு பிறகு நடப்பது நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும்.

பையா பாடல்வரி

படம்: பையா

பாடல்: பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்: பென்னி தயால்

பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோட பாசம்
இவள் கண்ணோடு பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை

(பூங்காற்றே பூங்காற்றே …..)

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி
உன் கண்ணைப் பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தை பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித்தடம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்

(பூங்காற்றே பூங்காற்றே …..)

அழகான நதி பார்த்தால் அதன் பெயரினைக் கேட்க மனம் துடிக்கும்
இவள் யாரோ என்ன பேரோ நானே அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்
ஏதேதோ ஊர் தாண்டி ஏராளம் பேர் தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற நெடுஞ்சாலை விளக்காக
அணைகின்றேன் எறிகின்றேன்
மொழி தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழித்துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைக்கிறதே
(என் நெஞ்சோடு…..)

(பூங்காற்றே பூங்காற்றே…..)

வேட்டைகாரன் பாடல்வரி3

படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன்

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் புடிச்சா உடும்பு புடி
நான் சிரிச்சா வாய்ல வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோள்பறை நீ எடு

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

ஏ வாழு வாழு வாழ விடு
வாழும் போது வானை எடு
வம்பு பண்ணா வாலை எடு
வணங்கி நின்னா தோள தொடு

ஏ வாழு வாழு வாழ விடு
வாழும் போது வானை எடு
வம்பு பண்ணா வாலை எடு
வணங்கி நின்னா தோள தொடு

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

ஏ மை ராசா
வா நீ க்லோஸா
ஆடு என் கூட வில்லேஜ் சல்ஸா
சல்ஸா சல்ஸா ச ச ச ச
ஜல்ஸா ஜல்ஸா ஜ ஜ ஜ ஜ ஜ

உணவு உடை இருப்பிடம் உழவனுக்குல் கிடைக்கணும்
அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கு படைக்கணும்
ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்வர்ட்டா மாறணும்
நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தணும்

வாய் மூடி வாழாதே வீண் பேச்சு பேசாதே
காலம் கடந்து போச்சுன்னு கவலை பட்டு ஏங்காதே
கனவு ஜெயிக்க வெணும்ன்னா கண்ணை மூடி தூங்காதே
குத்துங்கடா குத்து என் கூட சேர்ந்து குத்து

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

வரட்டி தட்டும் செவுத்துல வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டு போட்டு கருத்து போச்சு நகமடா
புள்ள தூங்குது இடுப்புல பூனை தூங்குது அடுப்புல
நம்ம நாட்டு நடப்புல யாரும் இத தடுக்கல

தாய் பேச்சௌ மீராதே தீயோர் சொல் கேட்காதே
ஏதோ நானும் சொல்லிப்புட்டேன் ஏத்துக்கிட்டா ஏத்துக்கோ
சொன்னதெல்லாம் உண்மையின்னா உன்னை நீயே மாத்திக்கோ
குத்துங்கடா குத்து ஏழூரு கேட்க குத்து

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

வேட்டைகாரன் பாடல்வரி2



படம்: வேட்டைக்காரன்
பாடல் : என் உச்சி மண்டையில சுர்ருங்குது
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்:கிருஷ்ண ஐயர், ஷோபா சந்திரசேகர்

என் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது டர்ருங்குது

என் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது டர்ருங்குது

கை தொடும் தூரம் காய்ச்சவளே
சக்கரையாலே செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே
தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணாலே என்னை சாய்ச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே

மியாவ் மியாவ் பூனை நான் மீசை வச்ச யானை
கள்ளு கடை பானை நீ மயக்குர மச்சானை
புல்லு கட்டு மீசை என் மேல பட்டு கூச
அச்சுதடி ஆசை உன் கிட்ட வந்து பேச

மந்திர காரி மாய மந்திர காரி
காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன்
ஓவியமா உன் உருவம் வரஞ்சுடுவேனே
உள்ளங் கையா நீ இருந்தா ரேகையா நான் இருப்பேன்
ஆயுலுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே

என் உச்சி மண்டையில சுர்………
உன்ன நான் பார்க்கையில கிர்……….
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது டர்………

அஞ்சு மணி பஸ் நான் அதை விட்டா மிஸ்
ஒரே ஒரு கிஸ் நீ ஒத்துக்கிட்டா யெஸ்
கம்மா கரை காடு நீ சுத்த கருவாடு
பந்திய நீ போடு நான் வரேன் பசியோடு

மந்திரகாரா மாய மந்திரக்காரா
ஹேய் அப்பாவியா மூஞ்ச வச்சு அங்கே இங்கே கைய வச்சு
நீயும் என்னை பிச்சு தின்ன கேக்குறியேடா
துப்பாக்கியா மூக்கை வச்சு
தொட்டவ போல மூச்சை விட்டு
நீயும் என்னை சுட்டு தள்ள பார்க்கிறியேடி

என் உச்சி மண்டையில சுர்………
உன்ன நான் பார்க்கையில கிர்……….
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது டர்………

என் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது டர்ருங்குது

சோடியம் அவசியமா

உடலுக்கு சோடியம் அவசியமா?
உடலின் திரவ சமநிலை, தசை சுருக்கம் மற்றும் நரம்பு செயல்பாடு போன்றவற்றிற்கு, சோடியம் மிக அவசியம். உடலில் அதிகளவு சேரும் சோடியம், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வழி வகுக்கும். தேவையான அளவு சோடியம், ஆரோக்கியத்திற்கு நல்லது. சோடியம், உணவுப் பொருட்களிலேயே இயற்கையாக கிடைக்கிறது.

புதன், ஜனவரி 20, 2010

குழந்தைகள் ஜாக்கிரதை

இந்த வீடியோ எனக்கு மெயில் வந்தது இதை பார்த்து எல்லோரும் தெரிந்து கொள்ளவே நான் இதை தருகிறேன் வெளிநாட்டில் வாழும் பெற்றோர்கள் தான் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை நாம் இன்னொருவரை நம்பி விட்டு போகிறோம் நம்மிடம் காசு வாங்கிக் கொண்டு நம் பச்சிழம் குழந்தையய் இப்படி கொடுமை படுத்தும் ஒரு ஹவுஸ் மெய்ட் நீங்கள் உங்கள் குழந்தைகளை விட்டு போகும் போது வீட்டில் கேமரா செட் செய்து விட்டு போங்கள் ப்ளீஸ்.

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்