Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வியாழன், பிப்ரவரி 25, 2010

சேனைக்கிழங்கு ஃப்ரை

இது என் தோழி எனக்கு அனுப்பிய குறிப்பு எனக்காக நேரம் ஒதுக்கி எனக்கு இதை அனுப்பியதர்க்கு நன்றி. நீங்களும் இதை செய்து பாருங்கள் நானும் செய்து பார்க்கிறேன் பார்க்கும் போதே சாப்பிடனும் போல் இருக்கு உங்களுக்கு.



தேவையான பொருள்கள்:

சேனைக் கிழங்கு-1/4கிலோ
தக்காளி-பெரியது 1

சோம்பு-1டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி,தனியா பொடி மிக்ஸ்-11/2டேபிள் ஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

எண்ணை-தேவையான அளவு


அரைக்க வேண்டியவை:
தக்காளி,சோம்பு,மிளகாய் பொடி,உப்பு

செய்முறை:
முதலில் சேனைக்கிழங்கு,உப்பு,மஞ்சள் பொடி
எல்லாவற்றையும் ஒரு
பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும்.

வெந்தவுடன் தனியாக எடுத்து வைக்கவும்.


கடாயில் எண்ணை ஊற்றி அரைத்த விழுதை
போட்டு வதக்கி
பின் வேக வைத்த சேனைக்கிழங்கை
அதனுடன் சேர்த்து
கிளறவும் நன்கு ஃப்ரை ஆனதும் இறக்கவும்.

சுவையான
சேனைக்கிழங்கு ஃப்ரை ரெடி.

வழங்கியவர்:அனிதா

பேபி கார்ன் மசாலா ஃப்ரை




தேவையான பொருள்கள்:


பேபி கார்ன் -6
கடலை மாவு-1தேக்கரண்டி

சோள மாவு-2தேக்கரண்டி

அரிசி மாவு-1தேக்கரண்டி

மஞ்சள் பொடி-1/4ஸ்பூன்

மிளகு பொடி-1/2டீஸ்பூன்

உப்பு-தேவைக்கு

மிளகாய் பொடி-1/4ஸ்பூன்

சிரகப் பொடி-1/4ஸ்பூன்

எண்ணை-பொறிக்க தேவையான அளவு


செய்முறை:

எல்லா மாவையும், எல்லா பொடிகளை
உப்பு சேர்த்து
கெட்டியான பதத்தில் மாவாக
கரைத்து கொள்ளவும்.


அந்த மாவுக் கலவையில் பேபி கார்னை
போட்டு
சேர்த்து கிளறி 15நிமிடம் வைக்கவும்.

பின் கடாயில் எண்ணை ஊற்றி சூடு வந்ததும்
பேபி கார்னை ஒவ்வொன்றாக போட்டு

பொறித்தெடுக்கவும்.


அதை சாஸ் தொட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்

குழந்தைங்க விருப்பி சாப்பிடுவார்கள்.

புதிய முகம் பாடல்வரி 2

படம்: புதிய முகம்
பாடியவர்:உன்னி மேனன்
இசை:இளைய ராஜாவ இருக்கலாம்



கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
கண்ணத்தில் குழியழகு
கார் கூந்தல் பெண்ணழகு


கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
கண்ணத்தில் குழியழகு
கார் கூந்தல் பெண்ணழகு

கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
கண்ணத்தில் குளியழகு
கார் கூந்தல் பெண்ணழகு


இளமைக்கு நடையழகு
முதுமைக்கு நரையழகு
கள்வர்க்கு இரவழகு
காதலர்க்கு நிலவழகு
நிலவுக்கு கரையழகு

பறவைக்கு சிறகழகு
நிலவுக்கு கரையழகு
பறவைக்கு சிறகழகு
அவ்வைக்கு கூனழகு
அன்னைக்கு சேயழகு


கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழியழகு
கார்கூந்தல் பெண்ணழகு

கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழியழகு
கார்கூந்தல் பெண்ணழகு


விடிகாலை விண்ணழகு
விடியும் வரை பெண்ணழகு
நெல்லுக்கு நாற்றழகு
தென்னைக்கு கீற்றழகு
ஊருக்கு ஆறழகு
ஊர்வலத்தில் தேரழகு
ஊருக்கு ஆறழகு
ஊர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு அழகு
தலைவிக்கு நானழகு


கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழியழகு
கார்கூந்தல் பெண்ணழகு

புதன், பிப்ரவரி 24, 2010

ஓட்ஸ் சாப்பிடுவதின் நன்மை!



ஓட்ஸ் என்பது உடல் நலக்குறைவு ஏற்ப்படவர்களுக்கு
மட்டும் என்று பலரும் நினைக்கிறார்கள்.
அது உண்மை இல்லை .
தினமும் ஓருவேளை ஓட் மீல் சாப்பிட ஆரம்பியுங்கள்.
அப்புறம் உங்களைப் பிடிக்க முடியாது.
அந்த அளவிற்க்கு மகிழ்ச்சியாக வாழ்வதால்
இம்யூனோகுளோபின்-ஏ என்ற பொருள் உடலில்
உருவாகி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து
உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

ஓட் என்பது புல்லரிசி கூழின் உலர்ந்த வடிவமாகும்.
இந்தியாவிலும் இப்போது கிடைக்கிறது.

குதிரைகள் சலிப்பின்றி ஓடுகின்றன. ஓட்ஸ் சாப்பிடுவதால்தான்
இதேபோல் எந்த வயதுக்காரரும் உற்சாகமாக வாழலாம்.
ஓட்ஸில் அதிக அளவு சத்தும், சக்தியும் உள்ளன.

100 கிராம் ஓட்ஸில் 150கலோரி கிடைக்கிறது .
மாவுச்சத்து 67சதவீகிதம்,புரதம் 16சதவிகிதம்,
கொழுப்பு 7சதவிகிதம் முதலியவை உள்ளன.
அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு உதவும்
முழுமையடைந்த கொழுப்பு. கொலஸ்ட்ராலை
குறைக்க 4.6 கிராம் நார்ச்சத்தும், ஒரு கிராம் லினோலிக்
அமிலமும் ஓட்ஸில் உள்ளன. மீனில் உள்ள ஓமேகா-3க்கு
இணையான அமிலம் இது.

சிகரெட், புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்கள்.
ஓரிரு மாதங்கள் உணவில் தினமும் ஓட்ஸ் சேர்த்து
வந்தால் ஓட்ஸில் உள்ள 'பி' குரூப் வைட்டமின்களும்
ஐந்து வகையான தாது உப்புக்களும் நச்சு முறிவு மருந்
தாகச் செயல்பட்டு சிகரெட் பிடிக்கவும். புகயிலை போடவும்
தூண்டும் பழக்கத்தை குறைக்கும்.

எந்த ஓர் உணவிலும் 24விதமான தாவர உயிர்க் கூறுகள்
இல்லை. ஓட்ஸில் மட்டுமே உள்ளன. இவை சிறந்த
ஆண்டி ஆக்ஸைடெண்ட்டுகளாகவும் செயல்பட்டு
நோய்களை தடுக்கின்றது.

ஃப்ரீ ராடிக்கல் திரவம் அதிகம் சுரக்காமல் தடுக்கப்
படிகிறது. இதனால் முதுமை தடுக்கப் படுகிறது.
புற்று நோய் வராமல் பாதுகாப்பும் தரப்படுகிறது.


எல்லாவற்றையும் விட தொற்று நோய்களையும்
பிற நோய்களையும் தடுக்கும் துத்தநாக உப்பும்
ஓட்ஸில் உள்ளன. இதனால் ஏதேனும் நோய்
வந்தவர்கள் ஓட்ஸ் கஞ்சி குடித்தால் விரைந்து
குணமாகி விடும் அவர்கள் உற்சாகமாக இருப்பார்கள்
எல்லோரும் சாப்பிட கூடிய கஞ்சி ஓட்ஸ் கஞ்சி
கொலஸ்ட்ரால் குறையும் பி பி உள்ள்வங்களுக்கும்
நல்ல உணவு.

திங்கள், பிப்ரவரி 22, 2010

கிட்ஸ் பாஸ்தா


ஏன் இந்த பாஸ்தாவிற்க்கு கிட்ஸ் பாஸ்தா என்று
பெயர் வைத்தேன் தெரியுமா?
இந்த பாஸ்தாவை என் மகன் விரும்பி சாப்பிட்டான்
அதான் இந்த பாஸ்தாவின் பெயர் கிட்ஸ் பாஸ்தா
என் மகன் எதையாவது விரும்பி சாப்பிட்டால்
அது ஆச்சர்யம் ஏன் என்றால் அவன் எதையும்
விரும்பி சாப்பிட மாட்டான் இதை விரும்பி சாப்பிட்டான்
நீங்களும் உங்கள் குழந்தைங்களுக்கு செய்து
கொடுத்து பாருங்க அப்பறம் நீங்களும் சொல்லுவீங்க
உங்க கிட்ஸ்சும் விரும்பி சாப்பிட்டார்கள் என்று.


தேவையான பொருள்கள்
பாஸ்தா-2கப்
மஞ்சள் குடை மிளகாய்-1
வெங்காயம்-2
முட்டை-2
கருவாயிலை-1கொத்து
எண்ணை-3டீஸ்பூன்
தக்காளி சாஸ்-3டீஸ்பூன்
உருளைக் கிழங்கு சிப்ஸ்-6ஸ்லைஷ்
மஞ்சள் பொடி-1/4ஸ்பூன்
பட்டாணி-1/2கப்
உப்பு-தேவையான அளவு
அஜினமோட்டோ-1ஸ்பூன்

செய்முறை:
முதலில் பாஸ்தாவை ஒரு பாத்திரத்தில் போட்டு
தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.

வெந்தவுடன் ஒரு ப்ளேட்டில் தண்ணீர் வடித்து எடுத்து வைக்கவும்.

பின் கடாயில் எண்ணை விட்டு வெங்காயம்,
குடை மிளகாய் இரண்டையும் போட்டு வதக்கவும்.

வதங்கியதும் கருவாயிலை மஞ்சள் பொடி, பட்டாணி சேர்த்து கிளறவும்.
பட்டாணி வெந்ததும் முட்டை ஊற்றி கிளறவும். பின் அஜினமோட்டோ,உப்பு,சாஸ் சேர்த்து கிளறவும். ஏற்கனவே பாஸ்தாவில் உப்பு
சேர்த்து இருப்பதால் உங்கள் விருப்பம் போல்
சேர்த்து கொள்ளவும்.

பாஸ்தாவை அதில் போட்டு சேர்த்து நன்கு கிளறவும்.

பின் சிப்ஸை கைகளால் நொருக்கி போடவும்.
பின் 5 நிமிடம் மூடி வைக்கவும் பின் மல்லி தூவி
கிளறி இறக்கவும்.

குழந்தைங்களுக்கு பிடித்த பாஸ்தா ரெடி.

பப்பாளியின் மகிமை

குறைந்த விலையில் கிடைக்கும் பழம் பப்பாளி
இந்தியாவில் ஈசியாக கிடைக்கும் அதனால்
எல்லோரும் வாங்கி சாப்பிடலாம் அதனால்
எல்லோரும் தினமும் சாப்பிட வேண்டிய
பழம் நாம் மதிய உணவிற்க்கு பிறகு
ஒரு துண்டாவது சாப்பிட வேண்டும்.

பப்பாளி சாப்பிடுவதின் பலன்கள்!

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைக்கான வாய்ப்பை எதிர்நோக்கும் பெண்கள்தவிர மற்ற எல்லோரும் விரும்பி சாப்பிடும் பப்பாளிப் பழம் நிறையசத்துக்கள், மருத்துவ குணங்கள் கொண்ட பழமாகும். இதில் வைட்டமின்கள் ஏ, சி,ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது.

பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் கொழுப்பை குறைக்கஉதவுகிறது. பப்பாளிப் பழத்தில் காணப்படும் வைட்டமின் `ஈ’ குடல் பகுதியில்கேன்சர் வராமல் தடுக்கிறது.


கிட்னியில் கல் இருப்பவர்கள் பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளைசாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம். அல்சர் தொல்லை உள்ளவர்கள்இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.

சிலருக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறுகோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பழத்தைசாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்க வைக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, பப்பாளிப் பழம் ஒரு அருமையானமருந்து. இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்வரவே வராது.

பப்பாளிப் பழத்தை கூழாக்கி வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்துவந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறிமுகம் பளப்பளப்பாக மாறிவிடும்.


பப்பாளிப்பழத்தை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியத்தைஎதிர்நோக்கி காத்திருக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாது என்ற கருத்து உள்ளது.

இவர்கள், பப்பாளிப் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடல் வெப்பநிலைஅதிகரித்து, ஆரம்ப நிலையில் உள்ள கரு கலைந்துவிடும் அல்லது கரு உருவாகுதல்தள்ளிப்போகும் என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். அதேநேரம், மேற்படிபெண்கள் இந்த பழத்தில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சாப்பிடுவதில் தவறேஇல்லை. ஒருவேளை, அளவுக்கு அதிகமாக பப்பாளிப் பழத்தை அவர்கள்எடுத்துக்கொண்டால், அந்த பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் பால்குடிப்பது உடல் வெப்பநிலை அதிகரிப்பதை தடுத்து நிறுத்திவிடும்.

ஞாயிறு, பிப்ரவரி 21, 2010

வட்டாரம் பாடல் வரி

படம்:வட்டாரம்
இசை:பரத்வாஜ்
பாடியவர்:கல்யாணி

இது நானா இது நானா
எனை நானே ரசித்தேனா
மெய் தானா மெய் தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றாய் கரைந்தேனா
என் வாழ்வில் நிறம் இல்லை
அவன் வண்ணம் சேர்த்தானா
ஓ ஓ ஓ ஓ
இது நான்னா
இது நான்னா
எனை நானே ரசித்தேனா

ஆ ஆ ஆ ஆ...........
ஆ ஆ ஆ ஆ........
ஆ ஆ ஆ ஆ.........

என் வானில் மேற்க்கே
போன மேகம் ஒன்று
மீண்டும் வந்து சேர்ந்ததே
என் காட்டில் வெல்லம்
போட்ட வெள்ளம் வந்து
வேரைத் தேடி பாய்ந்ததே
பார்வையில் இனிமேல் பூ பூப்பேன்
ஸ்பரிசத்தினாலே காய் காய்ப்பேன்
என் ஆசை கனவே
எனை ஆளும் திமிரே
உன் கையின் நீளம்
காலின் நொறுங்கி
மார்பின் ரோமம் மன்மத மச்சம்
தனி தனியே ரசிக்க விடு
தவணையிலே துடிக்க விடு
இது நானா இது நானா
எனை நானே ரசித்தேனா


வாடா வா
ஒற்றை கட்டில்
ஒற்றை தலையணை
ஒட்டி கொண்டு சேருவேன்
வாடா வா
கற்றை கூந்தலை உந்தன் இடுப்பில்
கட்டிக் கொண்டு தூங்குவேன்
சமைத்ததை தருவேன் ருசி விளங்க
சமைந்ததை தருவேன் பசி அடங்க
என் தென்னங் குளமே
தினம் துள்ளும் அணிலே
என் தென்னங் குளமே
தினம் துள்ளும் அணிலே
கட்டில் மேலே ரெட்டை வாலே
உடல் வளர்த்தேன் எனக்காக
உயிர் வளர்த்தேன் உனக்காக

இது நானா இது நானா
எனை நானே ரசித்தேனா
மெய்தானா மெய்தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றாய் கரைந்தேனா
என் வாழ்வில் நிறம் இல்லை
அவன் வண்ணம் சேர்த்தானா
ஓ ஓ ஓ ஓ
இது நானா இது நானா
எனை நானே ரசித்தேனா

வெள்ளி, பிப்ரவரி 19, 2010

தாய்ப்பால் சுரக்க....

தாய்ப்பால் நன்கு சுரக்க முருங்கைக் கீரையும்,
பசலைக் கீரையும் உதவும்.

அதே நேரத்தில் சில குழந்தைங்க தாய்ப்பால்
குடிக்க மாட்டாங்க அப்படி இருக்கும் போது
தாய்க்கு பால் கட்டி வலி எடுக்கும் அப்படி
தாய்ப்பால் குடிக்காமல் வலி எடுத்தால்
தாய்ப்பால் வற்ற கொத்துமல்லிக் கீரைச் சாறு
அருந்த வேண்டும்.

முருங்கைக் கீரையில் பாலை விட கால்ஷியம்
அதிகம் உள்ளது.

அதனால் பால் குடிக்காதவர்கள் முருங்கைக்
கீரையை தினமும் சாப்பிடுங்கள்.

சொறி சிரங்கால் அவதிப்படுபவர்கள் சில
மாதங்கள் சோயா மொச்சை மற்றும் சோயா பால்
சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிடுவதால்
உடம்பிற்க்கு நிறைய சக்தி கிடைக்கிறது.

முக்கியாமாக குழந்தைங்க வாரம் ஒரு
முறையாவது சாப்பிட வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளி
கிழங்கை தவிர்க்க வேன்டும் ஏன் என்றால்
அதில் கலோரியின் அளவு அதிகம் இருப்பதால் சாப்பிடக்கூடாது.

இதய நோயாளிகள் குறைவாக சாப்பிட வேண்டும்.

குழந்தைங்க நன்கு சாப்பிட வேண்டும்.

வியாழன், பிப்ரவரி 18, 2010

நண்டு பொறியல்


நான் இதுதான் முதல் முறையாக செய்தது ரொம்ப நல்லா இருந்தது எந்த மசாலாவும் சேர்க்காமல் சுவையான பொறியல் நீங்களும் செய்து பாருங்கள்.


தேவையான பொருள்கள்:

நண்டு சதை-1கப்
வெங்காயம்-2

காய்ந்த மிளகாய்-3

கடுகு-1ஸ்பூன்

பெப்பர்-1ஸ்பூன்
கருவாயிலை-1கொத்து

எண்ணை
- 2 தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு



செய்முறை:

நண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின்
நண்டை
உடைத்து அதில் இருந்து சதை எடுக்கவும்.

இப்போது
ரெடிமெட்டாகவே கிடைக்கிறது அப்படி
கிடைக்கவில்லை என்றால் முழு நண்டை வாங்கி

நாம் சதையை தனியே எடுத்து கொள்ளலாம்.


சட்டியில்
எண்ணை விட்டு அதில் கடுகு,
காய்ந்த மிளகாய்
போட்டு வதக்கவும்.

அதில்
வெங்காயம்,கருவாயிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் நண்டு சதையினை
அதனுடன்
சேர்த்து கிளறவும். நன்கு கிளறி உப்பு
சேர்த்து அப்படியே 3நிமிடம் மூடி வைத்து
விட்டு
பின் மூடியினை திறந்து கிளறிவிட்டு இறக்கவும்.

கொஞ்சம் காரம் தேவையென்றால் பெப்பர் தூவி
இறக்கவும்.

புதன், பிப்ரவரி 17, 2010

ஜுலி கணபதி பாடல்வரி

இந்த பாடலை கேட்கும் போது எவ்வளவு
இனிமையாக இருக்கு அப்படியே மனசு
லேசா போயிடும் நல்ல பாடல் அமைதியான
பாடல் அருமையான இசை சூப்பர் சாங்.

படம்:ஜுலி கணபதி
இசை:இளையராஜா


எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கு பிடிக்கிமே
உன் மனது போகும்
வழியில் என்தன்
மனது அறியுமே

என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்கிமே
காதல் நோய்க்கு மருந்து
தந்த நோயய் கூட்டுமே
உதிர்வது.... பூக்களா....
மனது வளர்த்த சோலையே
காதல் பூக்கள் உதிருமா



எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கு பிடிக்கிமே
உன் மனது போகும்
வழியில் என்தன்
மனது அறியுமே

என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்கிமே
காதல் நோய்க்கு மருந்து
தந்த நோயய் கூட்டுமே
உதிர்வது.... பூக்களா....
மனது வளர்த்த சோலையே
காதல் பூக்கள் உதிருமா

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரம் போகிறாய்
விட்டு விழகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்

காதலில் திருவிழா
கண்ணகளில் நடக்குதே
குழந்தையய் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிரேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கு பிடிக்கிமே
உன் மனது போகும்
வழியில் என்தன்
மனது அறியுமே

என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்கிமே
காதல் நோய்க்கு மருந்து
தந்த நோயய் கூட்டுமே


நான நான நந நான
நான நான நந நான
.. .. .. .. .. .......

வெள்ளி கம்பிகளை போலே
ஒரு தூறள் போடுதோ
விண்ணும் மண்ணில்
வந்து சேர அதன் பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினாள்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீனையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அறுவியாய்
அன்பிலே நனைக்கிறாய்
வேகம் போலே எனக்குள்ளே
மோகம் வளர்க்க கலைகிறாய்


எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கு பிடிக்கிமே
உன் மனது போகும்
வழியில் என்தன்
மனது அறியுமே

என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்கிமே
காதல் நோய்க்கு மருந்து
தந்த நோயய் கூட்டுமே
உதிர்வது.... பூக்களா....
மனது வளர்த்த சோலையே
காதல் பூக்கள் உதிருமா


எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கு பிடிக்குமே
உன் மனது போகும்
வழியில் என்தன்
மனது அறியுமே

போக்கிரி பாடல்வரி

இந்த பாடல் புதிதாக வந்த போது எனக்கு
ரொம்ப பிடிக்கும் இப்பவும் பிடிக்கும்
கேட்க பார்க்க நல்ல பாடல்.

படம் : போக்கிரி
இசை : மணி சர்மா

வசந்த முல்லை போலே
வந்து ஆடிடும் வெண்புறா

வசந்த முல்லை போலே
வந்து ஆடிடும் வெண்புறா
உள்ளுலாய் உள்ளுலாய் கொழந்தை போல
போகோ சேனல் பாக்க வச்சா
கபடி கபடி கபடி கபடி காதல்
தேளுகோடு போட்டு ஆடவச்சா
ஆத்தா....... மனம் பாரா காத்தாடியா பறக்குதே
ஆத்தா........ தெனம் கோலிசோடா போல
கண்ணு பொங்குதே..........


அப்போ கானா தான் புடிக்குமே
இப்போ மெலடியும் புடிக்குதே
குஷி இடுப்ப மட்டும் பாத்தவ
கண்ண நிமிந்து தான் பாக்குறேன்
காதல் என்பது ஆந்தையப் போலே
நைட்டு முழுவதும் முழிக்கும்
கம்பன் வீட்டு நாயைப் போலே
கவிதையா அது கொரைக்கு
அவ தும்மல் அழகுடா
அவ பிம்புள் அழகுடா
சோம்பல் அழகுடா
வசந்த முல்லை


வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறா.....


வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறா
காலமெல்லாம் நான் நனைவேனே
வாவா ஓடிவா

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறா


நம்பியாரப் போல் இருந்தேனே
எம்.ஜி. ஆரப் போல் மாத்திட்டா
கம்பி எண்ணியே வளர்ந்தேனே
தும்பி பிடிக்கவே மாத்திட்டா
காதல் என்பது காப்பியைப்
போலே ஆறிப்போனா கசக்கும்
காஞ்சு போனா மொளகா பஜ்ஜி
கேக்கப் போலவே இனிக்கும்
தாடி வச்சிருக்கும் கேடி ரௌடி
முகம் கேடி என்னை போல்
தெரியுது மாப்பு

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறா

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறா
உள்ளுலாய் உள்ளுலாய் கொழந்தை போல
போகோ சேனல் பாக்க வச்சா
கபடி கபடி கபடி கபடி காதல்
தேளுகோடு போட்டு ஆடவச்சா
ஆத்தா....... மனம் பாரா காத்தாடியா பறக்குதே
ஆத்தா........ தெனம் கோலிசோடா போல
கண்ணு பொங்குதே..........

முக்கியமான பழங்கள்! 1



நாம் தினமும் உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு வகையான பழங்களை கலந்து சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் நம் உடம்பிற்கு நல்லது. அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை வாங்கி சாப்பிடலாம். ஒருநாளைக்கு அதிகப் பட்சம் 400கிராம் அளவாவது பழங்கள் சாப்பிட வேண்டும். இதற்க்கு பதிலாக மற்ற உணவுகளின் அளவை குறைத்து சாப்பிடலாம்.

ஆப்பிள்:
தினமும் உடலில் உள்ள விஷப் பொருட்களை வெளியேற்ற ஆப்பிள் சாறு சாப்பிடுவது நல்லது. இன்றைய கண்டுபிடிப்பு ஆப்பிளில் உள்ள வைட்டமின் (சி) மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்று ஆரோக்கியம்,சக்தி, இளமை என்ற மூன்றையும் ஆப்பிள் தருகிறது. எல்லோரும் வாங்கும் விலையில் இருக்கும் ஆப்பிளை நாம் தினமும் வாங்கி சாப்பிடலாம் அல்லவா.

வாழைப் பழம்:
பழுத்த வாழைப்பழத்தில் 76சதவிகிதம் நீர்ச் சத்தும், 20சதவிகிதம் சர்க்கரைச் சத்தும், 12சதவிகிதம் புரதச் சத்தும் உள்ளது. உடல் நலக்
குறைவால் பலவீனமானவர்கள் படிப்படியாக உடல் நலம்பெற வாழைப்பழம் உதவுகிறது. உடல்தசை நன்கு இயங்க இதி உள்ள பொட்டாசியம் வீரியத்துடன் ஆற்றலை வழங்குகிறது. நீரிழிவு நோயாளிகள் தவிர எல்லா வடர்ஹினரும் தினமும் சாப்பிட வேண்டிய பழம் வாழைப் பழம்.


ஆரஞ்சு:
மூன்று டம்ளர் பால் தரும் கலோரியை விட ஒரு டம்ளர் ஆரஞ்சு சாறு அதிகச் சத்தைத் தருகிறது. ஜீரண உறுப்புகளும் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பட இதில் உள்ள டிலிமோனின் என்ற ஃபைட்
டோ கெமிக்கல் உதவுகிறது. இரத்தம் உறைவதை தடுப்பதால் மாரடைப்பும் தடுக்கபடும் வாய்ப்பு அதிகம் உண்டு அதனால் நீங்கள் தினமும் சாப்பிடவும்.



திராட்சை:
இதயத்தை பாதுகாக்கும் குயர்சிட்டின் என்ற ஃபைட்டோ இரசாயனம் திராட்சைகளில் இருக்கிறது. புற்று நோயைக் குணமாக்கும்
ஃபைட்டோஸ்டெரல்ஸ் என்ற இரசாயனமும் திராட்சையில் இருக்கிறது.


மாதுளம்
பழம்:

இதயத்துக்கும் நெஞ்சு வலிக்கும் சக்தி வாய்ந்த டானிக் மாதுளம் பழம்.
இதிலும் எல்லாஜிக் (ELLAGIC) என்ற புற்று நோய்த் தடுப்பு அமிலம் உள்ளது.

அமர்க்களம் பாடல்வரி

படம்:அமர்க்களம்

பாடியவர்:எஸ்.பி.பி


இசை:பரத்வாஜ்


பெண்:
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமாய் ஒரு உள்ளம் கேட்டேன்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமாய் ஒரு உள்ளம் கேட்டேன்


ஆண்:
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமாய் ஒரு உள்ளம் கேட்டேன்



உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வரிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன்

இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்

புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கை கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்

நிலவில் நனையும் சோலை கேட்டேன்
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்துபோக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்

தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பிடிக்க விண்மீண் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்

பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன்

உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்

எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்

சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலை மேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்

பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்

மலரில் ஒருநாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல்போல் விழவே கேட்டேன்
அழுதால் மழைபோல் அழவே கேட்டேன்

ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்

ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்

சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற பொறுமை கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்

புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன்

தொலைந்துவிடாத பொறுமை கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்

காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்

தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்

தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன்

குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்

கேப்சிகம் பெப்பர் சிக்கன்



இது புதிய சுவையான சமையல் இந்த சமையல்
ஹெல்த்தி ஃபுட்டும் கூட எண்ணை சேர்க்காத
சமையல் நான் இதை அடிக்கடி செய்வேன்
எண்ணை இல்லாமல் சமைக்கத்தான் எனக்கு
ஆசை அதான் முடியாதே கொஞ்சம் எண்ணை
சேர்த்துத்தான் ஆக வேண்டும் ஆனால் இந்த
டிஷ்க்கு எண்ணை தேவையில்லை நீங்களும்
செய்து பாருங்கள்.


தேவையான
பொருள்கள்:
சிக்கன்-10துண்டுகள் ஏற்கனவே கிரில் செய்தது
தக்காளி-2
குடை மிளகாய்-1
மிளகு தூள்-2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை
:

குடை மிளகாய்,தக்காளி இரண்டையும் வட்டமாக
நறுக்கிக் கொள்ளவும்.

மைக்ரோவேவ் ப்ளேட்டில் சிக்கனை பரப்பினால்
போல் வைத்து அதன் மேல் நறுக்கிய குடை மிளகாய்,
தக்காளி இரண்டையும் சிக்கன் மேல் போடவும்.

பின் அதன் மேல் மிளகு தூள், உப்பு இரண்டையும்
தூவி மைக்ரோவேவில் வைக்கவும் 5நிமிடம்
வைத்து தக்காளி,குடை மிளகாய் இரண்டும்
வதங்கி அதில் இருந்து சாறு வெளிவரும்
வரை வைத்து எடுக்கவும்.

செவ்வாய், பிப்ரவரி 16, 2010

சர்வம் பாடல்வரி

படம்: சர்வம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா

சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே
சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே

நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே…. நீதானே என் இமைகளை நீவினாய்

ஏ…..ஏ….ஏ…

சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே
சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே

நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே…. நீதானே என் இமைகளை நீவினாய்

ஏ…..ஏ….ஏ…

நீ ஓடும் பாதையில் நெஞ்சமோ
உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ
ஏய்……
என் விழியின் கறுமணியில் தேடிப்பார்
உன் காலடி தடங்களை காட்டுமே
ஓ…..
பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே
உன் சிறு இமை பிரிவில் தெரிந்ததே
விபத்துக்கள் எனக்குள் நடக்கவே
உன் நினைவுகள் தப்பி செல்ல வைக்குதே…

உன்மைகள் சொல்வதும்
உண்ர்ச்சியை கொள்வதும்
உயிர்வரை செல்வதும்
நீதானே….ஏ…

நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே…. நீதானே என் இமைகளை நீவினாய்
ஏ...ஏ.....ஏ...


திங்கள், பிப்ரவரி 15, 2010

கேளடி கண்மணி பாடல்வரி

படம்:கேளடி கண்மணி
இசை:இளையராஜா
பாடியவர்:எஸ்.பி.பி


மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் குங்குமமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்


மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ


முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

மன்மத லீலை பாடல்வரி

படம்: மன்மத லீலை
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்


மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்

இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்

பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே
காமனை வென்றாக வேண்டும்

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்

கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
அழகினைப் புரியாத பாபம்
அருகினில் இருந்தென்ன லாபம்

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம்

பீர்கங்காய் பொறியல்

சுலபமாக செய்யும் பொறியல் சீக்கிரம் செய்து முடித்திடலாம் பத்து நிமிடம் தான் ஆகும் சுவையக இருக்கும் முட்டை சேர்த்திருப்பதாள் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருள்கள்
பீர்கங்காய்- 2
வெங்காயம்-1
காய்ந்த மிளகாய்-3
கடுகு-1 டீஸ்பூன்
முட்டை-1
கருவேப்பிலை-1கொத்து
எண்ணை
-2 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை

முதலில் பீர்கங்காய் தோலினை நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
பின் காடயில் எண்ணை விட்டு கடுகு,காய்ந்த மிளகாய்,
கருவேப்பிலை போட்டு
வறுக்கவும் அதில் வெங்காயம்
போட்டு வதக்கவும் வதங்கியதும்
பீர்கங்காயினை
போட்டு கிளறவும் பின் உப்பு சேர்த்து வேகவிடவும்
வெந்தவுடன் முட்டை ஊற்றி கிளறவும் முட்டை
நன்கு
உதிரியாக வந்ததும் இறக்கவும்.

சமையல் டிப்ஸ்



டீ
டீ போடும் போது, டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து
கொதிக்க விடாதீர்கள் டீயின் சுவை குறைந்து விடும்.



கீரை
கீரை மசியல் செய்ய கீரையை கடையும் போது
அதனுடன் கால் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடைய
கீரை தனி சுவையுடன் இருக்கும்.


சோடா உப்பு
சோடா உப்பை அடிக்கடி உணவில் சேர்க்காதீர்கள்
வயிற்று உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்.



ரசம்
ரசம் இறக்கி வைத்ததும், ஒரு துளி நெய் சேர்த்து
பச்சை கொத்தமல்லியை பொடிப் பொடியாக
நறுக்கிப் போடுங்கள் மணமும் ருசியும் எடுப்பாய் இருக்கும்.



சாம்பார்
சாம்பார் மணக்க வேண்டுமா சாம்பாரை இறக்குவதற்கு
முன், ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் மல்லி
ஒரு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொரித்து, சிறிது
கரகரப்பாக அரைத்து கலக்கினால், சாம்பார்
"கம... கம...'வென இருக்கும்.

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்