
நான் இதுதான் முதல் முறையாக செய்தது ரொம்ப நல்லா இருந்தது எந்த மசாலாவும் சேர்க்காமல் சுவையான பொறியல் நீங்களும் செய்து பாருங்கள்.
தேவையான பொருள்கள்:
நண்டு சதை-1கப்
வெங்காயம்-2
காய்ந்த மிளகாய்-3
கடுகு-1ஸ்பூன்
பெப்பர்-1ஸ்பூன்
கருவாயிலை-1கொத்து
எண்ணை- 2 தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
நண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின்
நண்டை உடைத்து அதில் இருந்து சதை எடுக்கவும்.
இப்போது ரெடிமெட்டாகவே கிடைக்கிறது அப்படி
கிடைக்கவில்லை என்றால் முழு நண்டை வாங்கி
நாம் சதையை தனியே எடுத்து கொள்ளலாம்.
சட்டியில் எண்ணை விட்டு அதில் கடுகு,
காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.
அதில் வெங்காயம்,கருவாயிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நண்டு சதையினை
அதனுடன் சேர்த்து கிளறவும். நன்கு கிளறி உப்பு
சேர்த்து அப்படியே 3நிமிடம் மூடி வைத்து விட்டு
பின் மூடியினை திறந்து கிளறிவிட்டு இறக்கவும்.
கொஞ்சம் காரம் தேவையென்றால் பெப்பர் தூவி
இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக