
டீ
டீ போடும் போது, டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து
கொதிக்க விடாதீர்கள் டீயின் சுவை குறைந்து விடும்.
கீரை
கீரை மசியல் செய்ய கீரையை கடையும் போது
அதனுடன் கால் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடைய

கீரை தனி சுவையுடன் இருக்கும்.
சோடா உப்பு
சோடா உப்பை அடிக்கடி உணவில் சேர்க்காதீர்கள்
வயிற்று உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்.
ரசம்
ரசம் இறக்கி வைத்ததும், ஒரு துளி நெய் சேர்த்து
பச்சை கொத்தமல்லியை பொடிப் பொடியாக

நறுக்கிப் போடுங்கள் மணமும் ருசியும் எடுப்பாய் இருக்கும்.
சாம்பார்
சாம்பார் மணக்க வேண்டுமா சாம்பாரை இறக்குவதற்கு
முன், ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் மல்லி

ஒரு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொரித்து, சிறிது
கரகரப்பாக அரைத்து கலக்கினால், சாம்பார்
"கம... கம...'வென இருக்கும்.
2 கருத்துகள்:
ya very good work
it is a very useful tips to me. thank you
கருத்துரையிடுக