
தேவையான பொருள்
வெங்காயம்:2
தக்காளி:2
கருவாயிலை:2கொத்து
பச்சை மிளகாய்:2
மிளகாய் பொடி:2ஸ்பூன்
தனியா பொடி:1ஸ்பூன்
இஞ்சி,பூண்டு:2ஸ்பூன்
தயிர்:2ஸ்பூன்
கரம் மசாலா:1ஸ்பூன்
உப்பு:தேவையான அளவு
எண்ணை:தேவையான அளவு
மஞ்சள் பொடி:1/2ஸ்பூன்
பொறிக்க தேவையானவை
கீமா:1/2கிலோ
எண்ணை:தேவையான அளவு
உப்பு:தேவையான அளவு
மிளகாய் பொடி:1/2ஸ்பூன்
கரம் மசலா:1/2ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது:1/4ஸ்பூன்
கொத்த மல்லி:சிறிதளவு
செய்முறை
கீமாவை முதலில் உப்பு,மிளகாய் பொடி, இஞ்சி,பூண்டு,மல்லி,கரம் மசாலா, எல்லாவற்றையும் சேர்த்து கலந்து 5நிமிடம் வைக்கவும் பின்பு உருண்டையாக பிடித்து எண்ணையில் போட்டு பொறிக்கவும் பொன்நிறம் ஆனதும் எடுக்கவும்
பின் சட்டியில் எண்ணைய் ஊற்றி பட்டை கிராம்பு,ஏலக்காய் போட்டு வதக்கி வெங்காயம் போட்டு வதக்கவும் பின் தக்காளி,ப மிளகாய்,கருவாயிலை போட்டு வதக்கவும் வதங்கியதும் இஞ்சி,பூண்டு போட்டு வதக்கவும் நன்கு வதங்கியதும் பொடிகள் எல்லாவற்றையும் போட்டு வதக்கவும் உப்பு போட்டு தண்ணீர் விட்டு மூடி 10நிமிடம் கொதிக்க விடவும் பின் அதில் பொறித்த கீமா உருண்டையை போடவும் அதனுடன் தயிரையும் சேர்க்கவும் 10நிமிடம் கொதிக்க விட்டு மல்லி தூவி இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக