
தேவையான பொருள்கள்
புதினா-1கப்
மல்லிதழை-அரை கப்
வெங்காயம்-2
கடலை மாவு-1 கப்
இஞ்சி-1துண்டு
பச்சை மிளகாய்-2
சோம்பு-1ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணை-பொறிக்க

செய்முறை
புதினா,மல்லிதழை இரண்டையும் நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள்
பின் இஞ்சி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம்,புதினா,மல்லி எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில்
போட்டு உப்பு,கடலை மாவு,சோம்பு,இஞ்சி இவைகளையும் சேர்த்து
சிறிதளவு தண்ணீர் விட்டு பக்கோடாவிற்க்கு பிசைவது போல் பிசைந்து
கடாயில் எண்ணை விட்டு சூடானதும் மாவை சிறிது எடுத்து உதிர்த்தி விட்டாள்
போல் போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
புதினா,மல்லி இரண்டிலும் நிறைய நன்மைகள் இருக்கு ஆனால் குழந்தைகள் இதை சாப்பிட விரும்ப மாட்டார்கள் அதனால் இப்படி பாக்கோடா செய்து கொடுத்தாள் விரும்பி சாப்பிடுவார்கள் நான் நிறைய குழந்தைகளை பார்த்து இருக்கிறேன் இந்த பக்கோடாவை ஆசைப்பட்டு சாப்பிடுவதை நான் எங்கள் வீட்டிற்க்கு வரும் விருந்தாளிகளுக்கு செய்து கொடுத்து இருக்கேன் அவர்களை விட அவர்கள் குழந்தைங்கதான் விரும்பி சாப்பிடார்கள் நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து பாருங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக