
தேவையான பொருள்கள்
பரோட்டா-2
முட்டை-2
வெங்காயம்-2
தக்காளி-1
மல்லி இலை-4ஸ்பூன்
எண்ணை-3ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கோஸ்- 1/4கப்
கரம் மசாலா-அரை ஸ்பூன்
மிளகாய் தூள்-கால் ஸ்பூன்
மஞ்சள் தூள்-கால் ஸ்பூன்
தனியா தூள்-அரை ஸ்பூன்
கருவேப்பிலை-ஒரு கொத்து
உப்பு-தேவையான அளவு
செய்முறை
முதலில் பரோட்டாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளியையும்பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம் போட்டு வதக்குங்கள். பின் அதில் கருவேப்பிலை, தக்காளி, கரம் மசாலா,மிளகாய் தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள்,உப்பு எல்லாவற்றையும் போட்டு சேர்த்துக் கிளறவும். பின்பு கோஸ் சேர்த்து கிளறவும் கோஸ் வெந்ததும்
முட்டை ஊற்றி நன்கு கிளறவும் முட்டை உதிரியாக வந்ததும் பரோட்டாவை
போட்டு நன்கு எல்லாம் சேர்த்து கிளறவும் பின் மல்லி தூவி இறக்கவும்.
இதற்க்கு சைடிஷ் தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக