![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHmlV0PxjwsIZsUoRzpiHGfIlLMdc49q40WCgF_c7JI02MfG8YCOf7768kT1qqzaYW-JpuSe-gYkbNcZKc_gGgjQWMfX2FrlfN1__kH5kNYxmYdr2bwtnvoYs2VYUtSnYtTPJT1jozkD8/s320/images.jpg)
இதில் உள்ள குறிப்பு உங்களுக்கு கண்டிப்பாக உபயோகமானதாக
இருக்கும் நம் வீட்டில் உள்ள பொருட்களுக்கு தேவையானகுறிப்பு.
பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து காணப்படும்.
இதை தவிர்க்க அதனுடன் எட்டு முதல் 10 துளிகள்
விளக்கெண்ணெய் சேர்த்து வைத்தால் உறையாமல் இருக்கும்.
கொசுவலையில் சிறிய துளைகள் ஏற்பட்டிருந்தால்
அவற்றை அடைக்க கடைகளில் கலர் கலராக
விற்கப்படும் ஸ்டிக்கர்களை ஒட்டி விடலாம்.
பால்பாயின்ட் பேனாக்கள் திடீரென எழுதாமல் போனால்
அதன் முனைகளை கண்ணாடியில் தேய்த்து விட்டு பின்
எழுதத் துவங்கினால் நன்றாக எழுதும்.
பர்ஸ்கள் மற்றும் சில பைகளின் மீது எழுதியிருக்கும்
எழுத்துக்களை நீக்க விரும்பினால் நெயில் பாலீஷ்
ரிமூவரில் பஞ்சை நனைத்து, அந்த எழுத்துக்களின்
மீது தேய்த்தால் மறைந்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக